கோபி, மார்ச் 4- 1.3.2025 அன்று காலை 11 மணி அளவில் கோபி கழக மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் சத்தியமங்கலம் சிறீஆனைக்கொம்பு அரங்கத்தில் நடைபெற்றது.
மாநில மாணவர் கழகத் துணைச் செயலாளர் த. சிவபாரதி வரவேற்புரை ஆற்றினார். கோபி மாவட்ட தலைவர் வழக்குரைஞர் மு.சென்னியப்பன் தலைமை ஏற்று கோபி மாவட்டத்தில் நடைபெற வேண்டிய கழகப் பணிகள் குறித்து விரிவாக பேசினார். மாவட்ட காப்பாளர் ந.சிவலிங்கம், பெரியார் பெருந்தொண்டர் இராஜமாணிக்கம், மாவட்டத் துணைச் செயலாளர்கள் வெ.ப.அரங்கசாமி, க.மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினர்.
மாநில ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார் சிறப்புரையாற்றினார். அவர் தனது உரையில் சிதம்பரம்பரத்தில் நடைபெற்ற பொதுக்குழுவின் தீர்மானங்களுக்கு செயல்வடிவம் தருவது கழக அமைப்புகளை கோபி மாவட்டம் முழுவதும் பரவலாக உருவாக்குவதற்கு பிரச்சாரக் கூட்டங்களை தொடர்ந்து நடத்துவது கழகத் தோழர்களிடம் தொடர்ந்து தொடர்பில் இருப்பது, தந்தை பெரியார் மறைந்து 50 ஆண்டுகளுக்குப் பிறகும் திராவிடர் கழகம் உணர்வோடும் உயிர்ப்போடும் இயங்குவதற்கு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் அயராத உழைப்பினைப் பற்றியும், கழகத் தோழர்களின் அணுகுமுறை எப்படி இருக்க வேண்டும் என்பதை பற்றியும் விரிவாக எடுத்துரைத்தார். மாவட்ட மாணவர் கழகத் தலைவர் மா. சூர்யா நன்றியுரை ஆற்றினார்.
கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
எதிர்வரும் 09.03. 2025 ஆம் தேதி புதுப்பீர்கடவு பட்டரமங்கலத்தில் அன்னை மணியம்மையாரின் பிறந்தநாளை முன்னிட்டு திராவிடர் கழக மருத்துவ அணி சார்பில் பொது மருத்துவ முகாம் நடத்துவது என்றும் 15.2.2025 அன்று சிதம்பரத்தில் நடைபெற்ற கழக பொதுக்குழு தீர்மானங்களை ஏற்று செயல்படுத்துவது என்றும், உலகின் ஒரே பகுத்தறிவு நாளேடு விடுதலைக்கு கோபி மாவட்டத்தில் முடிவடைந்த சந்தாக்களை புதுப்பித்து வழங்குவது என்றும், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் பெரும் முயற்சியில் திருச்சி சிறுகனூரில் 95 அடி உயர பெரியார் சிலையுடன் அமையவுள்ள பெரியார் உலகத்திற்கு கோபி மாவட்டத்தில் சார்பில் பெருமளவில் நிதி வசூல் செய்து வழங்குவது என்றும், கோபி கழக மாவட்டத்தில் கிராமம் முதல் பேரூராட்சி ,நகராட்சி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் கழகப் பிரச்சார கூட்டங்களை மார்ச்-ஏப்ரல் மாதத்தில் 25 கூட்டங்களை நடத்துவது மூன்று மாதத்தில் கோபி மாவட்டத்தில் 10 புதிய கிளைக் கழகங்களை உருவாக்குவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட மாணவர் கழக தலைவர் சூர்யா, மாவட்ட இளைஞரணி செயலாளர் கார்த்தி, நம்பியூர் ஒன்றிய மாணவர் கழகத் தலைவர் மயில்சாமி, பட்டரமங்கல கிளை தோழர்கள் செயலாளர் நந்தகுமார், சுமதி, மணி, சதுமுகை பழனிச்சாமி உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டு உரையாற்றினர்.