அரசமைப்புச் சட்டத்தை வகுத்துத் தந்த அண்ணல் அம்பேத்கர் அவர்களுடைய பிறந்த நாளான ஏப்ரல் திங்கள் 14 ஆம் நாளை “சமத்துவ நாளாக” கொண்டாடப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் 13.4.2022 அன்று சட்டமன்றப் பேரவையில் அறிவித்தார். ஏப்ரல் திங்கள் 14 ஆம் நாள் அன்று. ஆண்டுதோறும், தலைமைச் செயலகம் தொடங்கி, அனைத்து அரசு அலுவலகங்களிலும் ‘சமத்துவ நாள் உறுதிமொழி’ ஏற்க செய்தார்.
“சமத்துவ நாள்” உறுதிமொழி
”ஜாதி வேறுபாடுகளுக்கு எதிராகவும், ஜாதிகளின் பெயரால் நடக்கும் சமூக அடக்குமுறைகளுக்கு எதி ராகவும். தொடர்ந்து போராடி. ஒடுக்கப்பட்டவர்களுடைய உரிமைகளுக்காகவும். ஒடுக்கப்பட்டவர்களுடைய சமத்துவத்திற்காகவும், வாழ்நாள் எல்லாம் குரல் கொடுத்து, எளிய மக்களின் உரிமைகளைப் பற்றி விழிப்புணர்வை ஊட்டிய, நம் அரசமைப்புச் சட்டத்தை வகுத்துத் தந்த அண்ணல் அம்பேத்கர் அவர்களுடைய பிறந்த நாளில், ஜாதி வேறுபாடுகள் ஏதுமில்லாத சமத்துவச் சமுதாயத்தை அமைக்க நாம் அனைவரும் பாடுபடுவோம் என்றும், சக மனிதர்களைச் ஜாதியின் பெயரால் ஒருபோதும் அடையாளம் காணமாட்டேன் என்றும், சக மனிதர்களிடம் சமத்துவத்தை வாழ்நாள் முழுவதும் கடைப்பிடிப்பேன் என்றும் உளமார உறுதி ஏற்கறேன்.
(முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில்)