மகிமைபுரம்,பிப்.27- தமிழ்நாடு பாரத சாரண சாரணிய இயக்கம் உடையார்பாளையம் சாரண மாவட்டத்தின் சார்பாக அணித்தலைவர் பயிற்சி முகாம் கடந்த 18 மற்றும் 19ஆம் தேதி ஆகிய இரண்டு நாள்கள் மகிமைபுரம் பி.எம் பப்ளிக் பள்ளியில் நடைபெற்றது.
310 சாரண சாரணியர் மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் ஜெயங்கொண்டம் பெரியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சாரண சாரணியர் 34 மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இம்முகாமில் சாரண இயக்கம் வரலாறு, சாரண உறுதிமொழி, சாரண விதி, சாரண குறிக்கோள், முதல் உதவி, கயிற்று கலைக்கூடாரம் அமைத்தல், பாடல்கள், உடற்பயிற்சி, யோகா, போன்ற பல்வேறு தலைப்புகளில் பயிற்சி அளித்தனர்.
பயிற்சி பெற்ற சாரண சாரணியர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. பயிற்சி பெற்ற சாரண சாரணியர் மாணவர் களுக்கு பெரியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் ஆர்.கீதா சாரண இயக்கம் மிகவும் அவசியமானது என்றும் சார்ந்த மாணவர்கள் உண்மையானவராகவும், நம்பிக்கை உடையவராகவும், தேசப்பற்று உடையவராகவும், இருப்பார்கள் என்று பாராட்டினார், மற்றும் பயிற்றுவித்த சாரண ஆசிரியர்
ஆர்.ரவிசங்கர் சாரண ஆசிரியை
ஆர்.ரஞ்சினி ஆகியோரை பாராட்டினார்.