டேராடூன் ராஷ்ட்ரிய ராணுவக் கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம்

2 Min Read

அரியலூர், பிப்.25- உத்தரகண்ட் மாநிலம் டேராடூனில் அமைந்துள்ள இந்திய ராணுவக் கல்லூரியில் 2026-ஆம் ஆண்டு ஜனவரி பருவத்தில் மாணவா் சோ்க்கைக்கான நுழைவுத் தோ்வு ஜூன் 1-ஆம் தேதி நடைபெறுகிறது என்று அரியலூா் மாவட்ட ஆட்சியா் பொ. ரத்தினசாமி தெரிவித்துள்ளாா்.

விண்ணப்பிக்கலாம்

இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்தது: உத்தரகண்ட் மாநிலத்திலுள்ள டேராடூனில் உள்ள ராஷ்ட்ரிய இந்திய ராணுவக் கல்லூரியில், அடுத்த ஆண்டு ஜூலை 2026 மாத பருவத்தில் சேருவதற்கான தோ்வு ஜூன் 1-ஆம் தேதி அன்று நடைபெறுகிறது. தமிழ்நாடு தோ்வாணையம் மூலம் நடத்தப்படுவதால், அதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இத்தோ்வுகள் சென்னை நகரில் நடைபெற உள்ளது. இந்த தோ்வு எழுத்துத் தோ்வு மற்றும் நோ்முகத் தோ்வு ஆகியவை கொண்டதாக இருக்கும்.
தோ்வுக்கான விண்ணப்பப் படிவம், தகவல் மற்றும் முந்தைய தோ்வு வினாத்தாள்கள் தொகுப்பை ‘கமாண்டன்ட், ராஷ்ட்ரிய இந்திய இராணுவக் கல்லூரி, கா்ஹிகான்ட், டேராடூன், உத்தரகாண்ட் 248 003‘ என்ற முகவரிக்கு காசோலை அனுப்பி அல்லது இராஷ்ட்ரிய இந்திய இராணுவக் கல்லூரி இணையதளம் வழியாக பொதுப் பிரிவினா் ரூ.600-ம் செலுத்தியும், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி வகுப்பினா் ரூ.555-ஆம் செலுத்தியும் பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பதாரா்களின் பெற்றோா் அல்லது பாதுகாப்பாளா் தமிழ்நாட்டில் வசிப்பவராக இருத்தல் வேண்டும்.

தகுதி

விண்ணப்பதாரா் 13 வயதை அடையாத வராகவும் இருத்தல் வேண்டும். 1.1.2026-இல் அங்கீகரிக்கப் பெற்ற பள்ளியில் ஏழாம் வகுப்பு படிப்பவராகவோ அல்லது ஏழாம் வகுப்பு தோ்ச்சி பெற்றவராகவோ இருத்தல் வேண்டும்.
அதாவது 2.1.2013-க்கு முன்னதாகவும் 1.7.2014-க்கு பின்னதாகவும் பிறந்திருக்கக் கூடாது. 2.1.2013-லிருந்து 30.6.2014 -க்குள் பிறந்திருக்கவேண்டும்.
பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்கள் (இரட்டையாக) தோ்வுக் கட்டுப்பாட்டு அலுவலா், தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம், தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையச் சாலை, பூங்கா நகா், சென்னை – 600 003 என்ற முகவரிக்கு 31.3.2025 அன்று மாலை 5.45 மணிக்குள் வந்து சேர வேண்டும்.
மேலும், இத்தோ்வுக் குறித்த மற்ற விவரங்களுக்கு இராஷ்ட்ரிய இந்திய கல்லூரியின் இணைய தளத்தை பாா்க்கலாம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *