அறிவியல் மாணவர் கூட்டமைப்பு 21ஆவது ஆண்டு விழா டாக்டர் ஜெயகோபால் நினைவேந்தல்

viduthalai
2 Min Read

அய்தராபாத், பிப். 17- அய்தராபாத்தில் அறிவியல் மாணவர் கூட்டமைப்பின் 21ஆவது ஆண்டு விழா மற்றும் டாக்டர் ஜெயகோபாலின் முதலாம் ஆண்டு நினைவு நாளில் “டாக்டர் ஜெய கோபாலுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு அவரது கொள்கைகளை அடுத்த தலைமுறைக்கு முன்னெடுத்துச் செல்வதாகும்,” என்று பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள் தெரிவித்தனர்.

முதலாம் ஆண்டு நினைவு நாள்

அறிவியல் மாணவர் கூட்ட மைப்பு (SSF) மற்றும் அறிவியல் மாணவர் கூட்டமைப்பின் நிறுவனரும் இந்திய நாத்திக சங்கத்தின் நிறுவனருமான டாக்டர் ஜெய கோபாலின் முதலாம் ஆண்டு நினைவு நாளை நினைவுகூரும் வகையில் அய்தராபாத்தின் சுந்தர அறிவியல் கேந்திரத்தில் உள்ள டொட்டி கொமாரையா மண்டபத்தில் ஒரு கூட்டம் நடைபெற்றது.

ஒருங்கிணைப்பாளர் ஜே. ரவி இந்திய நாத்திக சங்கத்தின் கொடியை ஏற்றியதுடன் நிகழ்ச்சி தொடங்கியது. இந்திய நாத்திக சங்கம் 1972ஆம் ஆண்டு மூடநம்பிக்கைகளை ஒழிக்கும் நோக்கத்துடன் நிறுவப்பட்டது, மேலும் 2004ஆம் ஆண்டில் அதன் மாணவர் பிரிவான அறிவியல் மாணவர் கூட்டமைப்பு நிறுவப் பட்டது. கடந்த 21 ஆண்டுகளாக, அறிவியல் மாணவர் கூட்டமைப்பு (SSF) மாணவர் பிரச்சினைகள், சமூக ஏற்றத்தாழ்வுகள் மற்றும் அறிவியல் சிந்தனையை ஊக்கு விப்பதில் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, டாக்டர் ஜெய கோபாலின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

சிறப்பு விருந்தினர்

சிறப்பு விருந்தினர்களான உஸ்மானியா பல்கலைக்கழக கலை கல்லூரி முதல்வர் பேராசிரியர் காசிம், மாணவர்களிடையே அறிவியல் மனப்பான்மையை வளர்ப்பதில் அறிவியல் மாணவர் கூட்டமைப்பின் முக்கிய பங்கை எடுத்துரைத்தார். மக்கள் கவிஞர் ஜெயராஜு, அறிவியல் மாணவர் கூட்டமைப்பு இயற்கையுடன் ஒருங்கிணைந்து, அறிவியலை ஊக்குவித்து, சமத்துவ சமுதாயத்தை உருவாக்குவதற்கு பங்களிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

அறிவியல் பார்வை(தர்ஷினி) அமைப்பின் நிறுவனர் ரமேஷ், அறிவியல் தொடர்ந்து முன் னேறும் நிலையில், அறிவியல் மாணவர் கூட்டமைப்பு மத கோட்பாடுகள், குருட்டு நம்பிக்கைகள் மற்றும் மூடநம்பிக்கைகளை எதிர்த்துப் போராட தொடர வேண்டும் என்பதை வலியுறுத்தினார். ஒருங்கிணைப்பாளர் ஜே. ரவி, டாக்டர் ஜெய கோபாலின் பார்வையின்படி, மூட நம்பிக்கைகளை ஒழிப்பதற்கான ஒரே நோக்கத்துடன் அறிவியல் மாணவர் கூட்டமைப்பு நிறுவப்பட்டது என்பதை மீண்டும் வலியுறுத்தினார். மாநில அரசாங்கத்தால் மூட நம்பிக்கை எதிர்ப்புச் சட்டம் இயற்றப்படுவதை வலியுறுத்த வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

மாணவர்களின் தற்கொலைகள்

அறிவியல் மாணவர் கூட்டமைப்பு மாநில தலைவர் வேதாந்த மவுர்யா, கல்வி அமைப்பில் உள்ள அழுத்தம் காரணமாக மாணவர்களின் தற்கொலைகள் அதிகரித்து வருவது குறித்து கவலை தெரி வித்தார். இலாபத்திற்காக மாண வர்களையும் அவர்களின் உரிமைகளையும் சுரண்டும் தனியார் கல்வி நிறுவனங்களை கண்டித்து, கல்விக்கு அறிவியல் பூர்வமான மற்றும் அன்பான அணுகுமுறையை அவர் வலியுறுத்தினார்.

இந்திய நாத்திக சங்கம் தலைவர், அறிவியல் மாணவர் கூட்டமைப்பு உட்பட அனைத்து மாணவர் அமைப்புகளும் மாணவர் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் முனைப்புடன் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

நிகழ்வில் திராவிட விஜய், பத்திரிகையாளர் ராகேஷ் மோகன், இந்திய நாத்திக சங்கத்தின் பெண்கள் தலைவர் சுனிதா, வெங்கடேஷ் சத்யசோதக், சிவா கல்யாணி மற்றும் அறிவியல் மாணவர் கூட்டமைப்பு மாவட் டத் தலைவர்கள் அன்வேஷ் மற்றும் சிவ சங்கர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *