அமெரிக்காவிற்கு இந்திய பிரதமர் சென்று வந்த பலன் இதுதான் அமெரிக்கா இதுவரை இந்தியாவுக்கு வழங்கி வந்த ரூ.182 கோடி நிதி உதவி ரத்து

Viduthalai
2 Min Read

வாஷிங்டன், பிப்.17 இந்தியாவில் வாக்கு சதவீதத்தை அதிகரிக்க அமெ ரிக்க அரசு சார்பில் ஒதுக்கப்பட்ட ரூ.182 கோடி நிதியுதவி ரத்து செய்யப்பட்டு உள்ளது.

நிதி உதவி
அமெரிக்கா சார்பில் உலகம் முழுவதும் சுமார் 180 நாடுகளுக்கு ஆண்டு தோறும் பல்வேறு பிரிவு களில் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக ஓராண்டில் சுமார் 68 பில்லியன் டாலரை அமெரிக்கா செலவிடுகிறது. இதில் உக்ரைன், இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளுக்கு பெருமளவு நிதி வழங்கப் படுகிறது.
கடந்த ஜனவரி 20-ஆம் தேதி அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்றார். அவர் பதவியேற்றவுடன், ‘அரசு செயல் திறன்’ என்ற புதிய துறை உருவாக் கப்பட்டது. இதன் தலைவராக தொழிலதிபர் எலன் மஸ்க் நியமிக் கப்பட்டார். இந்த புதிய துறை அமெ ரிக்க அரசின் செலவினங்களை குறைத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக பல்வேறு நாடுகளுக்கு வழங்கப்பட்ட நிதியுதவி ரத்து செய் யப்படுவதாக டிஓடிஜி அறிவித்தது.

ரூ.182 கோடி நிதி உதவி ரத்து
இதன்படி இந்தியாவில் வாக்கு சதவீதத்தை அதிகரிக்க அமெரிக்க அரசு சார்பில் ஒதுக்கப்பட்ட ரூ.182 கோடி நிதியுதவி ரத்து செய்யப்பட்டு உள்ளது. மேலும் வங்க தேசத்தில் அரசியல் சூழலை வலுப்படுத்த ஒதுக்கப்பட்ட ரூ.251 கோடி நிதியுத வியையும் அமெரிக்க அரசு ரத்து செய்திருக்கிறது.

நிதியை பெற்றது யார்?
இதுகுறித்து பாஜக மூத்த தலைவர் ராஜீவ் சந்திரசேகர் சமூக வலை தளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
இந்தியாவில் வாக்கு சதவீதத்தை அதிகரிக்க சுமார் ரூ.200 கோடியை வழங்கியதாக அமெரிக்க அரசு கூறுகிறது. இந்த நிதியை பெற்றவர்கள் யார் என்ற கேள்வி எழுகிறது. வங்கதேசம், நேபாளம் மற்றும் ஆசிய நாடுகளுக்கும் நிதியுதவி வழங்கப்பட்டிருக்கிறது. பல்வேறு நாடுகளில் போராட்டங்கள் நடை பெற்று வருகின்றன. இதன் பின்னணியில் அமெரிக்க அரசு வழங்கிய பணம் இருப்பதாக சந்தேகம் எழுகிறது. இந்தியாவில் யாரெல்லாம் பணம் பெற்றனர் என்பது குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும்.
இவ்வாறு ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *