கரூர் நகர திராவிடர்கழகத் தலைவர் செயல் வீரர் க.நா. சதாசிவம் (வயது 74) நேற்றிரவு மறைவுற்றார் என்ற தகவல் அறிந்து பெரிதும் வருந்துகிறோம்.
கழகம் நடத்திய போராட் டங்களில் எல்லாம் கலந்து கொண்டவர். கழகத் தோழர்கள், இனவுணர்வாளர் களைக் காணும் போதெல்லாம் கழகக் கொடி பொறித்த பேனாக்களை அளித்து மகிழ்பவர்.
கரூர் நகரில் பல தரப்பட்ட மக்களாலும் அறியப்பட்டவர். அவர்தம் மறைவு கரூர் கழகத்திற்குப் பேரிழப்பாகும். அவர் பிரிவால் பெரும் துயரத்திற்கு ஆளாகியுள்ள அவரது வாழ்விணையர் சவுந்தர நாயகி அம்மையாருக்கும், மகள்களுக்கும், கழகத் தோழர்களுக்கும் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்
சென்னை
16.2.2025