போக்குவரத்துத் துறையில் ஒப்பந்தப் பணியாளர்கள் – தற்காலிக ஏற்பாடுதான் அமைச்சர் சா.சி.சிவசங்கர் உறுதி

2 Min Read

அரசு, தமிழ்நாடு

சென்னை, ஜூலை 14 – சென்னை பல்லவன் சாலையில் உள்ள ஒன்றிய பணிமனையில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அரசு விரைவு போகுவரத்து கழ கத்தில், குருதிகொடை முகாமை போக்குவரத்து துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தொடங்கி வைத் தார். 

மேலும், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மத்திய பணிமனையில், பணியாளர்களுக் காக குளிர்சாதன ஓய்வு அறையினை அமைச்சர் திறந்து வைத் தார். அதனைத் தொடர்ந்து, தமிழ் நாடு அரசுப் போக்குவரத்துக் கழ கங்களில் பணிபுரிந்து, பணியின் போது இறந்த பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் 5 வாரிசுதாரர் களுக்கு பணியானையினை அமைச்சர் வழங்கினார்.

தொடர்ந்து 14ஆவது ஊதிய ஒப்பந்தத்தின்படி ஊதிய நிலுவைத் தொகை ரூ.171.05 கோடி வழங்கிட நிதி ஒதுக்கப்பட்டதனைத் தொடர்ந்து, முதற்கட்டமாக 10 பணியாளர்களுக்கு காசோலையினை வழங்கினார்.

நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர் களிடம் அமைச்சர் சா.சி.சிவசங்கர் கூறியதாவது: போக்குவரத்து துறை முழுவதுமாக தனியார் மயம் என்பது இல்லை. அரசு விரைவுப் போக்கு வரத்து கழகத்துக்கு புதிய ஓட்டுநர், நடத்துநர் எடுப்பதற்கு அரசாணை வெளியிடப்பட்டிருக்கிறது. இதற் காக ஆன்லைனில் விண்ணப்பம் பெற உள்ளோம். புதிதாக ஓட்டுநர், நடத்தனர் நியமிக்கப்பட்டதும், ஒப்பந்த பணியாளர்கள் விடுவிக்கப் படுவார்கள்.

இது தற்காலிக ஏற்பாடு தான் நிரந்தரமாக ஒப்பந்த அடிப்படை யில் பணிநியமனம், தனியார் மயம் எப்போதும் கிடையாது.

அனைத்து போக்குவரத்து கழ கங்களிலும் காலிப்பணியிடங்கள் கணக்கெடுக்கப்பட்டு வருகிறது, அரசு விரைவு போக்குவரத்து கழ கத்திற்கு 610 பேர் எடுக்கப்பட வுள்ளனர். புதிதாக பேருந்துகள் வாங்க ஒப்பந்தப் புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 4200 புதிய பேருந்துகள் வாங்கப் படவுள்ளது. அரசு விரைவுப் போக்குவரத்து கழகத்திற்கு 200 பேருந்துகள் வாங்கப்படவுள்ளது. 

வாகனங்களில் பொறுத்தப் பட்ட கேமராக்கள் மற்றும் கட்டுப் பாட்டு அறை சிறப்பாக செயல் பட்டு வருகிறது என்றார். இந்த நிகழ்ச்சியில், போக்குவரத்துத் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் பணீந்திரரெட்டி, தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *