மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை இரண்டு மடங்கு உயர்வு தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

Viduthalai
1 Min Read

சென்னை, ஜூலை 14 – மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கான கல்வி உதவித்தொகையை இரு மடங்காக உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

22,300 மாணவர்கள் பயன்பெறும் வகையில் 14 கோடியே 90 லட்சத்து 52 ஆயிரம் ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. 1 முதல் அய்ந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஒரு ஆண்டுக்கான கல்வி உதவித்தொகை ஆயிரம் ரூபாயி லிருந்து ரூ.2000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ரூ.3000-லிருந்து ரூ.6000 ஆகவும் ஒன்பதாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ரூ.4000-லிருந்து 8000 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் பட்டப்படிப்பு மாணவர்களுக்கு ரூ.6000-லிருந்து ரூ.12000 ஆகவும் தொழிற்கல்வி மற்றும் முதுகலை படிப்பு மாணவர்களுக்கு ரூ.7000-லிருந்து ரூ.14,000 ஆகவும் உயர்த்தி அரசாணை வெளியிடப் பட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *