திருநள்ளாறு, பிப்.14 திருநள்ளாறு தர்பா ரண்யேஸ்வரர் கோயில் பெயரில் போலி யாக இணையதள முகவரி தொடங்கி, பக்தர்களிடம் பண மோசடி செய்த புகார் தொடர்பாக கோயில் குருக்கள் உள்ட 2 பேர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
காரைக்கால் மாவட்டம் திருநள்ளா றில் சனி பகவானுக்கு தனி சந்நிதியுடன் கூடிய பிரணாம்பிகை சமேத தர்பாரண்யேஸ்வரர் என்கிற கோயில் உள்ளது. இக்கோயிலின் நிர்வாக மேலா ளர் எஸ்.சீனிவாசன், திருநள்ளாறு காவல் நிலையத்தில் அண்மையில் புகார் அளித்தார். அதில், “சுவாமிகளுக்கு அபிஷேகம், அன்னதானம், சிறப்பு அர்ச்சனை, சகஸ்ரநாம அர்ச்சனை, ஹோமம், தங்கும் விடுதி உள்ளிட்ட வற்றுக்கு வெளியூர் பக்தர்கள் கோயில் இணையதள முகவரியில் பதிவு செய்கின்றனர். பிரசாதங்களை அஞ்சல் வழியாக பெறுகின்றனர்.
போலி இணையதளம்
இந்நிலையில், கோயிலில் அர்ச்சனை செய்வதற்காக இணையதள முகவரி வாயிலாக வெளியூரைச் சேர்ந்த பக்தர்கள் பி.என்.சுப்பிரமணியன், என்.எஸ்.மகாதேவன் ஆகியோர் முறையே ரூ.981, ரூ.4,500 அனுப்பியதாகவும், பிர சாதம் வரவில்லை எனவும் புகார் தெரிவித்தனர். இதுகுறித்து கோயிலின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆய்வு செய்தபோது, அதுபோன்ற தொகை வரவில்லை என்பதும், போலியான இணையதள முகவரிக்கு பணத்தை அனுப்பியிருக்கலாம் எனவும் தெரியவந்தது. இது தொடர்பாக நட வடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
புகாரின்பேரில் காவல்துறையிரன் நடத்திய விசாரணையில், திருநள்ளாறு கோயிலில் குருக்களாக பணியாற்றும் வெங்கடேஸ்வர குருக்கள், பெங்களூ ருவைச் சேர்ந்த ஜனனி பரத் என்பவர் மூலம் கோயில் பெயரில் போலியாக இணையதளம் உருவாக்கி, பணம் வசூ லித்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து, போலி இணையதளத்தைத் தொடங்கிய காவல்துறையினர் வெங்கடேஸ்வர குருக்கள், ஜனனி பரத் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.