நீண்ட காலப்பிரச்சினைக்குத் தீர்வு சுனிதா வில்லியம்ஸ் மற்றும் வில்மோர் மார்ச் மாதம் பூமிக்கு திரும்புகின்றனர்

1 Min Read

வாசிங்டன், பிப். 14- விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் வில்மோர் ஆகிய இருவரும் ஆய்வுக்காக கடந்த ஆண்டு ஜூன் மாதம் பன்னாட்டு விண்வெளி ஆய்வு மய்யத்திற்கு சென்றனர். போயிங் ஸ்டார் லைனர் விண்கலத்தில் இருவரும் 8 நாள் பயணமாக விண்வெளி மய்யத்துக்கு சென்றநிலையில் விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இருவரும் பன்னாட்டு விண்வெளி மய்யத்திலேயே சிக்கி உள்ளனர். அவர்களை

பூமிக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இருவரும் விரைவில் பூமிக்கு திரும்புவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் வருகின்ற மார்ச் மாதம் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பேரி வில்மோர் ஆகியோர் பூமிக்கு திரும்புவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது. மார்ச் 12ஆம் தேதி ஏவப்படும் க்ரூ-10 டிராகன் விண்கலம் மூலம் சுனிதா, வில்மோர் பூமிக்கு திரும்புவார்கள் என கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே விண்வெளியில் அதிக நேரம் நடைபயணம் செய்த பெண் என்ற சாதனையை சுனிதா வில்லியம்ஸ் படைத்துள்ளார். சுனிதா 5 மணி நேரம் 26 நிமிடங்கள் விண்வெளியில் நடந்துள்ளார். 9ஆவது முறையாக விண்வெளியில் நடந்துள்ள சுனிதா வில்லியம்ஸ் இதுவரை விண்வெளியில் மட்டும் 62மணி நேரம் 6 நிமிடங்கள் நடந்திருக்கிறார். புட்ச் வில்மோருக்கு இது அய்ந்தாவது நடைப்பயணமாகும்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *