ராணிப்பேட்டை மாவட்டத்தில் மாநில ஒருங்கிணைப்பாளர் ஊமை.ஜெயராமன் இல்லம் தோறும் தோழர்கள் சந்திப்பு நிகழ்வு 27.1.2025 திங்கட்கிழமை பிற்பகல் 3 மணிக்கு தொடங்கி இரவு 8 மணிக்கு பாதி மாவட்டம் முடிந்தது. மாவட்ட தலைவர் சு.லோகநாதன், தலைமை செயற்குழு உறுப்பினர் பு.எல்லப்பன், மாவட்ட செயலாளர் செ.கோபி, ப.க. மாவட்ட செயலாளர் ந.இராமு,மாவட்ட துணைத் தலைவர் பொன். வெங்கடேசன், தி.மு.க. தலைமைக் கழக பேச்சாளர் இரா.தமிழ்வாணன், ஆகியோர் உடன் சென்றனர். மேனாள் மாவட்ட தலைவர் பொ.பெருமாள், சிப்காட் ராஜா, தோழர். வசந்தம் இராமலிங்கம், மாற்றுத் திறனாளிகள் – சிறந்த ஆசிரியர்கள் முகிலன், இணையர் யாழினி, மாவட்ட ப.க.தலைவர் த.க.பா.புகழேந்தி, மேனாள் சட்டமன்ற உறுப்பினர் வாலாஜா ஜெ. அசேன், மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் துணைத் தலைவர் காவேரிப்பாக்கம் போ.பாண்டுரங்கன் ஆகியோரை சந்தித்து மாநில ஒருங்கிணைப்பாளர் ஊமை.ஜெயராமன் பயனாடை அணிவித்தார்.
ராணிப்பேட்டை வட்டத்தில் இல்லம்தோறும் தோழர்கள் சந்திப்பு
1 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books