விழுப்புரம் மாவட்டம், களத்தூர் கிராமத்தில் மாணவர்கள் சந்திப்புக் கூட்டம் 08.02.2025 அன்று மாலை 6 மணிக்கு தொடங்கி எழுச்சியோடு நடைபெற்றது. இக்கூட்டமானது விழுப்புரம் மாவட்ட கழகச் செயலாளர் அரங்க.பரணிதரன் தலைமையில், மாவட்ட இளைஞரணி தலைவர் த.பகவான்தாஸ் முன்னிலையில் நடைபெற்றது. மாநில சட்டக் கல்லூரி திராவிட மாணவர் கழக அமைப்பாளர் நாகை.மு.இளமாறன் சிறப்புரையாற்றினார். களத்தூர் திராவிட மாணவர் கழகத் தோழர்கள் கிருஷ்ணா, சரண் உள்ளிட்ட 20க்கும் மேற்ப்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.