திருச்சி, பிப். 7- திருச்சி, பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின், நாகம்மையார் கலையரங்கத்தில் 01/02/2025 அன்று காலை 10.00 மணியளவில் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பிரியா விடை விழா நடைபெற்றது.
கடந்த 30 ஆண்டுகளுக்குப் பிறகு, பள்ளியின் தாளாளர் வீ.அன்புராஜ் அவர்களின் அறிவுறுத்தல் மற்றும் வழி காட்டுதலோடு இவ்விழா, பள்ளி முதல்வர், முனைவர்.க.வனிதா தலைமையில் சிறப்பாக நடை பெற்றது.
மொழி வாழ்த்துடன் தொடங்கிய நிகழ்வில், பள்ளியின் 11ஆம் வகுப்பு மாணவி ஆர்.திவ்யா வரவேற்புரை வழங்கி வந்தோரை வரவேற்றார்.
தொடர்ந்து,பதினோராம் வகுப்பு மாணவ, மாணவிகள் தங்களின் பாடல், இசை மற்றும் நடன நிகழ்ச்சிகளால் பன்னிரண்டாம் வகுப்பு மாண வர்களுக்குப் பிரியாவிடை வழங்கினர்.
நிகழ்வில் பேசிய பள்ளி முதல்வர், “பன்னிரண் டாம் வகுப்பில் நல்ல மதிப் பெண்களுடன் தேர்ச்சி பெற்று பள்ளிக்கும், பெற்றோர்களுக்கும் பெருமை தேடித் தருவதோடு, எதிர்காலத்தில் நம் பள்ளியின் பெருமைமிகு மாணவர்களாக நீங்கள் வர வேண்டும்” என்றும் வாழ்த்துரை வழங்கினார்.
தொடர்ந்து, பள்ளியின் முதுகலை மற்றும் இளங்கலை ஆசிரியர்கள் மாணவர்களுக்கு அறிவுரை மற்றும் வாழ்த்துரைகள் வழங்கிச் சிறப்பித்தனர்.
12ஆம் வகுப்பு மாணவி ரவுலா பாத்திமா, அட்சயா மாணவர்கள் தாரிக் அப்துல்லா, மாதவன் திருச்செல்வம் ஆகியோர் ஏற்புரை வழங்கி நிகழ்வினை ஏற்பாடு செய்து தந்த தாளாளர், முதல்வர் ஆகியோருக்கு நன்றி தெரிவித்தனர்.
தொடர்ந்து உடனடி நடன மாடும் நிகழ்வில் மேடையேறி தங்கள் திறமையை நிரூபித்த 12ஆம் வகுப்பு மாணவன் பிரசன்னா மற்றும் மாணவி பிரியாசிறீ ஆகியோருக்கு சிறப்புப் பரிசுகள் வழங்கப்பட்டது.
நிறைவாக நாட்டுப்பண்ணு டன் விழா இனிதே நிறைவுற்றது.
நிகழ்விற்கான ஏற்பாடுகளைப் பள்ளியின் 11ஆம் வகுப்பு மாண வர்கள் மற்றும் அலுவலகப் பணித் தோழர்கள் ஆகியோர் சிறப்பாகச் செய்திருந்தனர்.