பிப்.26 இல் கழகத் தலைவர் ஆசிரியர் பங்கேற்கும் பொதுக்கூட்டத்தினை எழுச்சியுடன் நடத்த முடிவு!
விருதுநகர், பிப்.4 பிப்.26 இல் கழகத் தலைவர் ஆசிரியர் பங்கேற்கும் பொதுக்கூட்டத்தினை எழுச்சியுடன் நடத்த இராசபாளையம் மாவட்டக் கலந்துரையாடல் கூட்டம் முடிவு செய்யப்பட்டது.
விருதுநகரில் 01.02.2025 அன்று நண்பகல் 12 மணியளவில், பேராலி சாலை, கருப்பசாமி நகர் பொன்மேனி அரங்கில், விருதுநகர், இராசபாளையம் மாவட்டக் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா!
இராசபாளையம் மாவட்டத் தலைவர் இல.திருப்பதி தலைமையில், விருதுநகர் மாவட்டச் செயலாளர் விடுதலை தி.ஆதவன் வரவேற்புரையாற்றினார். பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற மாநிலத் தலைவர் வா.நேரு, மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் ஆகியோர் கூட்ட நோக்கம் குறித்தும், கழக செயல் திட்டங்கள் குறித்தும் சிறப்புரையாற்றினர்.
இராசபாளையம் மாவட்டம் முறம்பில், 26.2.2025 இல், கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் பங்கேற்கும் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா மற்றும் ‘திராவிட மாடல்’ அரசின் வரலாற்றுச் சாதனைகள் விளக்கப் பொதுக்கூட்டத்தினை எழுச்சியுடன் ஏற்பாடு செய்து நடத்து வதெனவும், நிகழ்விற்கு இசைவளித்த தமிழர் தலைவர் ஆசிரியருக்கு நன்றி தெரிவித்தும், விருதுநகர், இராச பாளையம் மாவட்டக் கிளைகள் தோறும் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டங்கள் நடத்துவதெனவும் தீர்மானிக்கப்பட்டது.
தோழர்கள் கருத்துரை
பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற மாநிலத் துணைத் தலைவர் ந.ஆனந்தம், விருதுநகர் மாவட்டக் கழகக் காப்பாளர் அ.தங்கசாமி, தலைவர் கா.நல்லதம்பி, மாவட்ட ப.க. அமைப்பாளர் மா.பாரத், கழக அமைப்பாளர் வெ.முரளி, துணை அமைப்பாளர் பெ.சந்தனம், பொதுக்குழு உறுப்பினர் வெ.புகழேந்தி, துணைத் தலைவர் ம.கதிரவன், இராசபாளையம் மாவட்ட ப.க. தலைவர் பா.அசோக், மாவட்டக் கழகத் துணைத் தலைவர் பூ.சிவகுமார், சி.மகேஸ்வரி, ப.க. செயலாளர் கோ.பெத்தையா, அமைப்பாளர் மு.முத்தரசு, திருவில்லிபுத்தூர் ஒன்றிய அமைப்பாளர் கு.போத்திராசு, சிவகாசி மாநகர் தலைவர் மா.முருகன், செயலாளர் து.நரசிம்மராஜ், இளைஞரணி அமைப்பாளர் மு.ஜீவாமுனிஸ்வரன், அருப்புக்கோட்டை நகர அமைப்பாளர் க.சுப்பிரமணி, ஒன்றியச் செயலாளர் இரா.முத்தையா, இளைஞரணி செயலாளர் க.திருவள்ளுவர், தி.இராசலட்சுமி, க.எழிலன், மல்லாங்கிணறு ஆதிமூலம் மற்றும் தோழர்கள் கருத்துரை வழங்கினர்.
நிறைவாக இராசபாளையம் மாவட்ட கழக செயலாளர் இரா.கோவிந்தன் நன்றி கூற, கூட்டம் நிறைவுற்றது.