சாவதற்கு அழைக்கும் கும்பமேளா – உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 48 ஆக உயர்ந்தது!

Viduthalai
1 Min Read

பிரயாக்ராஜ், பிப்.2 –- கும்பமேளாவில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர் களின் எண்ணிக்கை 48 ஆக உயர்ந்துள்ளது. உத்தரப்பிரதேச மாநி லம் பிரயாக்ராஜில் நடை பெற்று வரும் மகா கும்ப மேளாவில், புனித நீராடகோடிக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.

கூட்டம் அதிகரித்ததால் பயங்கர நெரிசல் ஏற்பட்டதில் முதிய வர்கள், பெண்கள் உள்ளிட் டோர் மயங்கி கீழே விழுந்த னர். கூட்ட நெரிசலில் 30 பேர் பலி யாகினர். 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் படுகாயமடைந்து மருத்துவ மனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். பலி, காயம டைந்தவர்கள் குறித்த தகவலை உத்தரப்பிரதேச அரசு மறைக்க முயற்சித்த தாக புகார் எழுந்துள்ளது.

இந்நிலையில், கும்ப மேளா வில்உயிரிழந்த வர்களின் எண்ணிக்கை 48 ஆக உயர்ந்துள்ளது.

உத்தரப்ப்பிரதேசத்தில் மட்டும் 14 பேர் உயிரி ழந்தது உறுதி செய்யப் பட்டுள்ளது. விபத்து நடந்த அன்று மற்றொரு இடத்தில் இரண் டாவது முறையாக கூட்ட நெரி சல் ஏற்பட்டு விபத்து ஏற்பட்டதாக பொது மக்க ளும், உள்ளூர் ஊட கங்களும் தொடர்ந்து கூறி வருகின்றன. ஆனால் உத்தரபிரதேச அரசு இதுவரை அதனை உறுதி செய்யவில்லை.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *