புதுடில்ஜன.31 லி, மகாகும்பமேளாவில் கூட்ட நெரிசலால் 30 பேர் பலியானது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப் பட்டுள்ளது.
இதுகுறித்து வழக் குரைஞர் விஷால் திவாரி என்பவர் உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், “கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் உத்தரபிரதேச அரசின் நிர்வாக குளறுபடி, அலட்சியம், பாதுகாப்பு குறைபாடு ஆகியவற்றை சுட்டிகாட்டுகிறது. கும்ப மேளா கூட்ட நெரிசல் குறித்து உத்தரபிரதேச அரசு விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும்.
நடவடிக்கை
பக்தர்கள் பாதுகாப்பு விவகாரத்தில் அலட்சிய மாக நடந்து கொண்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்” என வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் அந்த மனுவில், “மகாகும்பமேளாவில் பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் ஒன்றிய, மாநில அரசுகள் கூட்டாக இணைந்து செயல்பட வேண்டும். அனைத்து மாநிலங்களும் மகாகும்பமேளா பகுதியில் மையங்கள் அமைத்து, தங்கள் மாநிலங்களிலிருந்து வரும் பக்தர்களுக்கு வழி காட்ட உத்தரவிட வேண்டும்” என வலியுறுத்தப்பட்டுள்ளது.
தீ விபத்து
உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜ் நகரில் நடந்து வரும் மகாகும்பமேளாவுக்கு உலகம் முழுவதும் இருந்து வருகை தரும் பக்தர்கள் தங்குவதற்காக கங்கைக் கரையில் தற்காலிக கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்குள்ள தற்காலிக கூடாரங்கள் அமைக்கப் பட்டுள்ள செக்டார் 19 பகுதியில் கடந்த 19ஆம் தேதி இரண்டு எரிவாயு உருளைகள் வெடித்து தீ ஏற்பட்ட தீ விபத்தில் 18 கூடாரங்கள் எரிந்து தீக்கிரையாகின.