பெங்களூர், ஜன.31 இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் கிரிஸ் கோபாலகிருஷ் ணன் மீது எஸ்சி/எஸ்டி வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளது.
இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் சேனாபதி கிரிஸ் கோபாலகிருஷ்ணன் உள்பட இந்திய அறிவியல் மய்யத்தின் மேனாள் தலைவர் பலராம் உள்ளிட்ட 18 பேர் மீது எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 71ஆவது நகர சிவில் மற்றும் அமர்வு நீதிமன்றத்தின் அடிப்படையில் கருநாடகா, சதாசிவா நகர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த புகாரை கொடுத்தவர் பழங்குடியின போவி சமூ கத்தைச் சேர்ந்த துர்கப்பா ஆவார். அவர் தனது புகா ரில், “நான் இந்திய அறிவி யல் மய்யத்தின் நீடித்த தொழில் நுட்பப் பிரிவில் பணி புரிந்தேன். அப்போது, கடந்த 2014-ஆம் ஆண்டில் நான் பணிபுரிந்த நேரத்தில் போலியான வன்கொடுமை வழக்கில் சிக்கவைக்கப்பட்டு பணிநீக்கம் செய்யப்பட்டேன். மேலும், ஜாதிய ரீதியிலான அவதூறுகளுக்கும் அச்சுறுத்தல்க ளுக்கும் உள்ளாக்கப்பட்டேன்” என்று கூறியுள்ளார்.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மற்ற நபர்களில் கோவிந்தன் ரங்கராஜன், சிறீதர் வாரியர், சந்தியா விஸ்வேஸ்வரா, ஹரி கேவிஎஸ், தாசப்பா, பலராம் பி, ஹேமலதா மிஷி, சட்டோபாத்யாயா கே, பிரதீப் டி சவுகர் மற்றும் மனோகரன் ஆகியோர் அடங்குவர். ஆனால், இது தொடர்பாக இந்திய அறிவியல் மய்யம் தரப்பிலோ அல்லது அதன் மேனாள் அறங்காவலர் குழுவில் இடம்பெற்றிருந்த கிரிஷ் கோபாலகிருஷ்ணன் தரப்பிலோ எந்த எதிர்வினை செயல்பாடும் இல்லை.