கும்பமேளாவில் கூட்ட நெரிசலில் சிக்கி 30 பேர் உயிரிழந்தது தொடர்பாக நெஞ்சை உலுக்கும் 3 ஒளிப் படங்கள் வெளியாகியுள்ளன. ஒரு ஒளிப்படத்தில் உயிரிழந்த அனைவரின் உடல்களும் சிதறிக் கிடக்க, மற்றொன்றில் கண்முன்னே இறந்த உறவினரின் உடலை கட்டிப்பிடித்து இளம்பெண் கதறி துடிக்கிறார். இன்னொரு ஒளிப்படத்தில் குடும்பத்தினரை இழந்து தவிக்கும் 40 வயது ஆண் கையெடுத்து கும்பிட்டு உதவி கேட்கிறார். இவர்களுக்கு எப்படி ஆறுதல் சொல்வது?