எதிர்க்கட்சிகளின் கடுமையான எதிர்ப்பையும் மீறி வக்பு மசோதாவுக்கு நாடாளுமன்ற கூட்டுக் குழு ஒப்புதல்

viduthalai
2 Min Read

புதுடில்லி, ஜன.28 வக்பு திருத்த சட்ட மசோதாவுக்கு நாடாளு மன்ற கூட்டுக் குழு (ஜேபிசி) ஒப்புதல் அளித் துள்ளது. இதில், ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி பரிந்துரைத்த 14 திருத்தங்கள் ஏற் கப்பட்டுள்ளன. அதே நேரத்தில், எதிர்க்கட் சிகள் கொண்டு வந்த திருத்தங்கள் ஓட்டெ டுப்பின் மூலம் நிராகரிக் கப்பட்டன.

வக்பு சட்டத்தில் திருத்தம்

தற்போதுள்ள வக்பு சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள திட்ட மிட்டுள்ள ஒன்றிய அரசு, இது தொடர்பான திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் அறி முகப்படுத்தியது. ஒன்றிய சிறுபான்மை விவகார அமைச்சர் கிரண் ரிஜிஜு, திருத்த மசோதாவை மக்களவையில் அறிமுகப் படுத்தினார். இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, இந்த திருத்த மசோதா நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் ஆய்வுக்கு

பரிந்துரைக்கப்பட்டது. இதையடுத்து, பாஜக தலைவர் ஜகதாம்பிகா பால் தலைமையிலான நாடாளுமன்றக் கூட்டுக் குழு இந்த மசோதா தொடர்பாக ஆய்வு நடத்தியது. இந்த மசோதாவில் தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்பிக்கள் 23 திருத்தங்களும், எதிர்க் கட்சிகள் சார்பில் 44 திருத்தங்களும் முன்மொழி யப்பட்டன.

வாக்கெடுப்பு

இந்நிலையில், நேற்று நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டுக் குழுக் கூட்டத்தில், இந்தத் திருத்தங்கள் மீது வாக்கெடுப்பு நடத் தப்பட்டது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஜகதாம்பிகா பால், “44 திருத்தங்கள் விவாதிக்கப்பட்டன. ஆறு மாதங்களில் நடைபெற்ற விரிவான விவாதங்களில் அனைத்து உறுப்பினர்களிடமிருந்தும் திருத்தங்களை நாங்கள் கோரினோம். இது எங்கள் இறுதிக் கூட்டம். பெரும்பான்மை (வாக்கு) அடிப்படையில் 14 திருத்தங்களை குழு ஏற்றுக்கொண்டது.

எதிர்க்கட்சி எம்பிக் களால் முன்மொழியப் பட்ட திருத்தங்கள், வாக்கெடுக்குப் பின் நிராகரிக்கப்பட்டன. ஏனெனில், அந்த திருத்தங் களுக்கு 10 உறுப்பினர்கள் மட்டுமே ஆதரவு தெரி வித்திருந்தனர். ஆனால், 16 உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இறுதி அறிக்கை ஜனவரி 31-ஆம் தேதிக்குள் சமர்ப் பிக்கப்படும்” என தெரிவித்தார்.
அதேவேளையில், நாடாளுமன்றக் கூட் டுக் குழு தலைவர் சர்வாதி காரி போல நடந்து கொண்டதாகவும், அவரது நடவடிக்கை ஜனநாயக செயல்முறையை சீர்குலைத்துள்ளதாகவும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

காலக்கெடு

இந்த நாடாளுமன்றக் கூட்டுக் குழுவில், தேசிய ஜனநாயகக் கூட்டணியைச் சேர்ந்த 16 எம்.பி.க்களும், எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 10 எம்.பி.க்களும் உள்ளனர். இந்தக் குழு 30 தடவைக்கு மேல் கூடி இந்த மசோதா குறித்து விவாதித்தது. அப்போது ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு இடையே காரசார விவாதம் நடைபெற்றது. கடந்த நவம்பர் 29-க்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது. பின்னர், இந்த காலக் கெடு பிப்ரவரி 13 வரை நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில், நேரில் நடைபெற்ற கடைசி கூட்டத்தில் வக்பு திருத்த மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது கவனித்தக்கது.

வக்பு சொத்துகளை ஒழுங்குபடுத்தவும், சொத்துகளை நிர்வகிப் பதில் உள்ள சிக்கல்கள் மற்றும் சவால்களைத் தீர்க்கவும் 1995-ஆம் ஆண்டு வக்பு சட் டத்தை திருத்துவதே இந்த மசோதாவின் நோக்கமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *