புதுடில்லி, ஜன. 28- அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன் கொடுமை வழக்கில், சென்னை காவல் ஆணையர் மீதான உயர் நீதிமன்றத்தின் கருத்து களுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது.
பாலியல் வன்கொடுமை
அண்ணா பல்கலைக் கழக மாணவிக்கு பாலியல் வன்கொடுமை சம்பவம் நடந்த நிலையில், இது அரசியல் கட்சிகள் இடையே பெரும் அதிர் வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார். இதனிடையே இந்த வழக் கில் முதல் தகவல் அறிக்கை இணையதளத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் உண்மை வெளிவரும் முன்னரே சென்னை உயர்நீதிமன்றம் தலையிட்டு சென்னை காவல்துறை ஆணையருக்கு எதிராக உத்தரவுகளை பிறப்பித்தது.
மேலும், அரசு அனுமதி யின்றி செய்தியாளர் சந்திப்பை நடத்தி, வழக்கு குறித்த முக்கிய தகவல்களை பகிர்ந்த சென்னை காவல் ஆணையர் அருண் மீது நடவடிக்கை எடுக்கலாம் என்று உத்தரவிடப்பட்டது. இதைத் தொடர்ந்து, காவல் ஆணையருக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கைகள் என்ற உத் தரவை எதிர்த்து, தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கு நேற்று விசார ணைக்கு வந்தது. அப் போது தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான வழக்குரைஞர், “இந்த விவகாரத்தில் நாங்கள் பாதிக்கப்பட்ட மாணவி தரப்புக்கு ஆதரவாக உள்ளோம். அவருக்கான அனைத்து உதவியையும் அரசு செய்து வருகிறது.இந்த வழக்கில் உயர்நீதிமன்றம் காவல் ஆணையருக்கு எதிராக தெரிவித்த கருத்தை மட்டுமே நீக்க கோருகிறோம்” என்று வாதிட்டார்.
உச்சநீதிமன்றம் தடை
மேலும், “ஒன்றிய அரசின் தொழில்நுட்ப தவறுகளுக்கு காவல்துறை ஆணையர் என்ன செய்வார்? தொழில்நுட்ப தகவல்கள் காரணமாகவே முதல் தகவல் அறிக்கை கசிந்திருக்க வாய்ப்புள்ளது என்பதை ஒன்றிய அரசு ஒத்து க்கொண்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் “சிறப்புப் புலனாய்வு குழு விசார ணைக்கும், நிவாரணம் வழங்குவதற்கும் தமிழ்நாடு அரசு எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை” என்றும் தெரிவிக்கப்பட்டது. தமிழ்நாடு அரசின் இந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்றம் காவல்துறை ஆணைய ருக்கு எதிரான உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது.