ஒன்றிய அரசின் தோல்விகளும் திசை திருப்பும் ஆளுநர் ரவியின் பொய்களும்

Viduthalai
5 Min Read

பேராசிரியர்
மு.நாகநாதன்

நிதி மோசடி
வங்கி மோசடி
பங்குச் சந்தை மோசடி
எனப் பல மோசடிகளுக்கு
நரேந்திரர் ஆட்சியில் பஞ்சமே இல்லை.
ரூபாயின் மதிப்பு நாள்தோறும் தேய்கிறது!
தங்கம் விலை உயர்ந்து கொண்டே இருக்கிறது
மக்கள் நுகரும் அன்றாடப் பொருட்கள் விலை உயர்கிறது
பெரும்பான்மையான மக்கள் வறுமையின் பிடியில் !
படித்தவர்கள் இடையே கடந்த 10 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு வேலையில்லாக் கொடுமை!
வருமான வரிக் குறைப்பு
இந்திய முதலாளிகள் கூட்டமைப்பு, நிதி அமைச்சர் நிர்மலாவிற்கு 2025-26 ஆம் ஆண்டின் ஒன்றிய அரசின் நிதி நிலை அறிக்கையில் வருமான வரியைக் குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
எதற்காக?
நுகர்வு குறைகிறது
உற்பத்தியாகும் பொருட்கள் சந்தையில் தேங்குகின்றன.
இது உள்நாட்டு முதலாளிகளுக்கு நன்றாகத் தெரிகிறது.

அதுமட்டுமல்ல
அதிக நிதியை வைத்திருக்கும் தனி நபர்கள் (High Net worth Individuals) இந்தி யாவிலிருந்து தங்களின் குடியுரிமையைத் துறந்து வேறு நாடுகளுக்கு மூதலீடு செய்வதற்குச் செல்கிறார்கள்.

குடியுரிமைத் துறப்பு
2011ஆம் ஆண்டில் மட்டும் 16 இலட்சம் இந்தியர்கள் தங்கள் குடியுரிமையைத் துறந்து வெளிநாடுகளுக்குச் சென்று விட்டார்கள்.
2022 ஆம் ஆண்டில் 2.05 இலட்சம் இந்தியர்கள் குடியுரிமையைத் துறந்துள்ளனர்.
2023 ஆம் ஆண்டில் இத்தகைய முதலீட்டாளர்கள் 5100 இந்தியர்களும்,
2024 ஆம் ஆண்டில் 4300 இந்தி யர்களும் இந்தி யாவை விட்டு வெளியேறி விட்டார்கள்.
கடந்த 10 ஆண்டுகளில் பல இலட்சம் கோடி ரூபாய் முதலீடுகளை இந்தியா இழந்து வருகிறது.
2024 ஆம் ஆண்டின் உலக முதலீடு அறிக்கையில் (World Investment Report -2024) அந்நிய முதலீடு 2020 ஆண்டில் 6.5 விழுக்காடாக இருந்தது.
2023 ஆம் ஆண்டில் 2.2 விழுக்காடாகச் சரிந்துள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
நரேந்திரரின் 10 ஆண்டு ஆட்சியின் பொருளாதாரம் தேக்கநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

பங்குச் சந்தை சரிவு
அமெரிக்காவின் குடியரசுத் தலைவராக இரண்டாவது முறையாக டிரம்ப் பொறுப்பு ஏற்றார்.
டிரம்ப் இந்திய ஆட்டத்தைத் தொடங்கும் முன்பே இந்தியப் பங்குச் சந்தை சரிவைக் கண்டுள்ளது. ரூபாய் 7 இலட்சம் கோடி

முதலீட்டாளர்களுக்கு இழப்பு!
இந்தியப் பங்குப் பரிவர்த்தனை வாரியத்தின் முழு நேர உறுப்பினர் ஆனந்த் நாராயணன் (டிசம்பர் 18 ஆம் நாள் 2024)இந்திய முதலாளிகள் கூட்டமைப்பு கருத்தரங்கில் பங்குச் சந்தையில் மாற்றுவழி முதலீடு பற்றி ஒரு கருத்தைப் பதிவு செய்துள்ளார்.
புதிதாக முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக மாற்று முதலீடு நிதியம் (Alternative Investment Fund) என்ற அமைப்பின் வழியாகத் தனியார் நிறுவனங்கள், அறக்கட்டளைகள் ஆகிய அமைப்புகள் விரைந்து இலாபம் பெறுவதற்குப் பல நிதி முதலீடுகளைச் செய்து வருகின்றன.

ஒன்றிய அரசு பல நேர்முக வரிச் சலுகைகளை இவ்வகை முதலீடுகள் வளர்வதற்கு அளித்து வருகிறது.
இந்த முதலீட்டுத் தொகையான ரூபாய் 5 இலட்சம் கோடியில், ரூபாய் ஒரு இலட்சம் கோடி கேள்விக்குரிய வகையில் உள்ளது என்று ஆனந்த் நாராயணன் குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் கேள்விக்குரிய முதலீட்டை யார் செய்தார்கள்? எப்படிச் செய்தார்கள்? எங்கிருந்து இந்த முதலீட்டை எடுத்து வந்தார்கள்?
இவ்வகை கேள்விக்குரிய முதலீட்டாளர்களுக்கு வழங்கிய நேர்முக வரிச் சலுகைகளின் தொகை எத்தனைக் கோடிகள்?

நடவடிக்கை என்ன?
அமலாக்கத் துறையும், வருமானவரித் துறையும் இவ்வித மோசடி நிறுவனங்கள் மீது எடுத்த நடவடிக்கைகள் என்ன?
இந்தியாவின் ரூபாய் மதிப்பு அமெரிக்க டால ருக்கு ரூபாய் 86.45 ஆகச் சரிந்துள்ளது. இதனால் வெளிநாடுகளுக்குச் சென்று உயர் கல்வி பெறுவதற் கும் ஆய்வுகளை மேற்கொள்வதற்கும் செல்லும் மாண வர்களின் செலவு பல இலட்சங்களாக உயர்ந்துள்ளது.

இந்தியாவின் ஏற்றுமதி குறைந்து இறக்குமதி அதிகரித்து வருவதால் இந்தியாவின் வர்த்தகக் கணக்கில் ரூ.6.02 இலட்சம் கோடி (இந்திய ரூபாயின் அமெரிக்க மதிப்பு ரூ86/- என்ற அடிப்படையில்) துண்டு விழுந்துள்ளது. இந்தியாவின் கடன் தொகை ரூ.18.43 இலட்சம் கோடியாக உள்ளது. வெளிநாட்டுக் கடன் தொகை அளவு ரூ.5.56 இலட்சம் கோடியாக உள்ளது.
2023 ஆம் ஆண்டில் வெளிநாட்டுக் கடனுக்காக இந்தியா செலுத்திய வட்டித்தொகை ரூ.1.93 இலட்சம் கோடியாகும். இந்தியாவின் மொத்தக் கடன் அளவு என்பது உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 58.3% (GDP) ஆகக் கடுமையாக உயர்ந் துள்ளது.
உள்நாட்டுப் பொருளாதாரத்தையும் வெளிநாட்டு நிதி மேலாண்மை செய்வதில் பாஜக ஒன்றிய அரசு பெரும் தோல்வியைச் சந்தித்து வருகிறது.
நிதி அதிகாரங்களின் உச்சநிலை குவிப்பே இந்தியா இன்று சந்தித்து வரும் பெரும் வீழ்ச்சிக்குக் காரணமாக அமைகிறது. இதனால் மாநிலங்களும் பெரும் பாதிப்பிற்குள்ளாகி வருகின்றன.

முதலிடத்தில் தமிழ்நாடு
நிதிப் பகிர்வு செய்வதில், பேரிடர் நிதி வழங்குவதில் ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்குப் பல நெருக்கடிகளைத் தொடர்ந்து கொடுத்து வந்தாலும் தமிழ்நாடு இந்திய மாநிலங்களில் மானுட மேம்பாட்டுக் குறியீடுகளில் முதல் மூன்று இடங்களைப் பெற்று வருகிறது. தமிழ்நாடு பல இலட்சம் ரூபாய் முதலீடுகளைப் பெற்று வருகிறது.
ஏழைகள் வாழ்வில் ஒளியேற்றும் பல திட்டங்கள் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
நிட்டி அயோக்கின் புள்ளி விவ ரங்களே தமிழ் நாட்டின் வளர்ச்சி யையும், வளர்ச்சியின் பலன்கள் மக்கள் முன்னேற்றத்திலும் சென்று அடை கின்றன என்பதை உறுதி செய்துள்ளன.

திராவிடச் செம்மல் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினின் மக்கள் ஆதரவு ஆட்சியைக் கண்டு, பொய்யை அறிக்கையாக்கி- தமிழ்நாடு சரிகிறது என ஆளுநர் ரவி புலம்புகிறார்.
பாஜக ஒன்றிய அரசின் திறனற்ற ஆட்சியால் இந்தியப் பொருளாதாரம் சரிந்து வருகிறது என்பதை உலகளவிலான புள்ளிவிவரங்களும், இந்திய மக்கள் நாளும் சந்தித்து வரும் வேலையிழப்பும், வரிக்கொடுமையும் அம்பலப்படுத்துகின்றன.
கண்ணாடி வீட்டில் இருந்து கல் எறிகிறார் ரவி.

இந்தியாவின் ரூபாய் மதிப்பு அமெரிக்க டாலருக்கு ரூபாய் 86.45 ஆகச் சரிந்துள்ளது. இதனால் வெளிநாடுகளுக்குச் சென்று உயர் கல்வி பெறுவதற்கும் ஆய்வுகளை மேற்கொள்வதற்கும் செல்லும் மாணவர்களின் செலவு பல இலட்சங்களாக உயர்ந்துள்ளது. இந்தியாவின் ஏற்றுமதி குறைந்து இறக்குமதி அதிகரித்து வருவதால் இந்தியாவின் வர்த்தகக் கணக்கில் ரூ.6.02 இலட்சம் கோடி (இந்திய ரூபாயின் அமெரிக்க மதிப்பு ரூ86/- என்ற அடிப்படையில்) துண்டு விழுந்துள்ளது. இந்தியாவின் கடன் தொகை ரூ.18.43 இலட்சம் கோடியாக உள்ளது. வெளிநாட்டுக் கடன் தொகை அளவு ரூ.5.56 இலட்சம் கோடியாக உள்ளது. 2023 ஆம் ஆண்டில் வெளிநாட்டுக் கடனுக்காக இந்தியா செலுத்திய வட்டித்தொகை ரூ.1.93 இலட்சம் கோடியாகும். இந்தியாவின் மொத்தக் கடன் அளவு என்பது உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 58.3% (GDP) ஆகக் கடுமையாக உயர்ந்துள்ளது. உள்நாட்டுப் பொருளாதாரத்தையும் வெளிநாட்டு நிதி மேலாண்மை செய்வதில் பாஜக ஒன்றிய அரசு பெரும் தோல்வியைச் சந்தித்து வருகிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *