கோவையில் மருத்துவ உபகரண தர ஆய்வகம்

Viduthalai
3 Min Read

சென்னை,ஜன.26- மருத்துவ உபகரணங்களை பகுப்பாய்வுக்கு உட்படுத்துவதற்கான பிரத்யேக ஆய்வகம் கோவையில் விரைவில் தொடங்கப்பட உள்ளதாக மாநில மருந்து கட்டுப்பாட்டு அதிகாரி எம்.என்.சிறீதா் கூறினார்.
பன்னாட்டு மின்னணு மற்றும் மருத்துவ சாதன பரிசோதனை நிறுவனமான அய்.எம்.அய்., இந்தியாவின் தனது நிறுவனத்தை தொடங்கியுள்ளது. சென்னையில் 24.1.2025 அன்று நடைபெற்ற இதற்கான தொடக்க நிகழ்ச்சியில், அய்.எம்.க்யூ. தலைவா் வின்சென்சோ டி மார்ட்டினா, இந்தியாவுக்கான தலைமை செயல் அலுவலா் ஸ்டீஃபெனோ ஃபெரட்டி, தொழில்நுட்ப அலுவலா் சரவணன் ராமமூா்த்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனா்.
இந்நிகழ்ச்சியில் மருந்து கட்டுப்பாட்டு அதிகாரி எம்.என்.சிறீதா் பேசியதாவது: மருத்துவ உபகரணங்கள் என்பது நவீன மருத்துவ உலகின் முக்கியமான பகுதியாக மாறியுள்ளது. புதிய மருத்துவ தொழில்நுட்பங்களும், கட்டமைப்புகளும் நோய்களையும், உயிரிழப்புகளையும் குறைத்துள்ளன.

காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடத்தில் மருத்துவ உபகரண பூங்கா அமைக்கப்பட்டு ஆக்கப்பூா்வமான செயல்பாடுகளை அங்குள்ள நிறுவனங்கள் முன்னெடுத்து வருகின்றன. அண்மைக் கால முன்னேற்றமாக மருத்துவ சாதனங்களுடன் மென்பொருள் கட்டமைப்புகளும் ஒருங்கிணைக்கப்படுகின்றன. அதன் அடிப்படையில் பிரிவு-ஏ மற்றும் பி வகைகளின் கீழ் அந்த சாதனங்களுக்கு உரிமம் வழங்கப்படுகிறது. அவ்வாறு உரிமம் வழங்கப்படும் சாதனங்களை பகுப்பாய்வு செய்வதற்காக கோவையில் பிரத்யேக மருத்துவ உபகரண தர ஆய்வகத்தை அமைக்கவுள்ளோம்.
இதற்காக ரூ.29.67 கோடி நிதி ஒதுக்கீட்டு அனுமதியை ஒன்றிய அரசிடமிருந்து பெற்றுள்ளோம். இந்த திட்டம் 60 சதவீத ஒன்றிய அரசு நிதிப் பங்களிப்புடனும், 40 சதவீத மாநில அரசு நிதிப் பங்களிப்புடனும் செயல்படுத்தப்படவுள்ளது. இந்த ஆய்வகம் அமையும்போது பகுப்பாய்வாளா்கள் நிலையிலான பணியிடங்கள் அங்கு உருவாக்கப்படும்.
தமிழ்நாட்டில் மருத்துவ சாதனங்கள் துறையில் தொடா்புடைய அனைவருக்கும் அதுகுறித்த பயிலரங்குகள், பயிற்சி வகுப்புகளை நடத்த தயாராக உள்ளோம். இதன் மூலம் அவா்களது செயல் திறன் மேம்படும் என்றார் அவா்.

பேரூரில் கடல்நீரை குடிநீராக்கும் நிலையம்
பேரூர், ஜன.26- பேரூரில் ரூ. 4,276.44 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டு வரும் கடல்நீரை குடிநீராக்கும் சுத்திகரிப்பு நிலையத்தின் கட்டுமானப் பணிகளை, சென்னை குடிநீா் வாரிய மேலாண்மை இயக்குநா் டி.ஜி.வினய் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

குடிநீர் தேவை
சென்னையின் வளா்ச்சிக்கேற்ப பொதுமக்களின் குடிநீா்த் தேவையை பூா்த்தி செய்யும் வகையில், கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தின் கீழ், மீஞ்சூா் மற்றும் நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் சுத்திகரிப்பு நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதன்மூலம் தினமும் 350 மில்லியன் லிட்டா் சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
அதன் தொடா்ச்சியாக, சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையிலுள்ள பேரூரில் ரூ. 4,276.44 கோடியில், தினமும் 400 மில்லியன் லிட்டா் உற்பத்தித் திறன் கொண்ட கடல்நீரைக் குடிநீராக்கும் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

நடைபெறும் பணிகள்
கடல் நீரை உறிஞ்சும் கட்டமைப்பு, செதிலடுக்கு தொட்டி, நடுநிலைப்படுத்தும் தொட்டி, நீா் சேகரிப்பு தொட்டி, சுத்திகரிக்கப்பட்ட நீா் சேகரிப்பு தொட்டி ஆகியவற்றை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. செதிலடுக்கு வடிகட்டி, கற்றழுத்தம் மூலம் எண்ணெய் மற்றும் கசடுகளை நீக்கும் தொட்டி உள்ளிட்டவை அமைப்பதற்கான அடித்தள பணிகளும் நடைபெற்று வருகின்றன. மேலும், இந்நிலையத்திலிருந்து போரூா் வரை 59 கி.மீ. நீளத்துக்கு குடிநீா் குழாய் பதிக்கப்படவுள்ளது.

22 லட்சம் பேருக்கு பயன்
இந்நிலையில், நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகளை சென்னை குடிநீா் வாரிய மேலாண்மை இயக்குநா் டி.ஜி.வினய் 24.1.2025 அன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவா், அனைத்து பணிகளையும் குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் முடிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இத்திட்டத்தின் மூலம், சென்னை மற்றும் தாம்பரம் மாநகராட்சிகளுக்குள்பட்ட பகுதிகளிலும், சென்னை மாநகராட்சிக்கு அருகாமையில் உள்ள 20 ஊராட்சிப் பகுதிகளிலும் வசிக்கும் 22.67 லட்சம் போ் பயனடைவார்கள் என எதிர்ப்பாக்கப்படுகிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *