சென்னை, ஜன.26- அண்ணா பல்கலைக்கழகத்தின் எம்.அய்.டி.யில் பயிற்சி பெற்று டிரோனை இயக்கும் பெண்கள், அதன் மூலம் மாதம் ரூ.1 லட்சம் வரை சம்பாதிக்கின்றனர்.
அண்ணா பல்கலைக்கழகம்
இன்றைய காலகட்டத்தில் டிரோன் பயன்பாடு அனைத்து விதமான பணிகளிலும் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. யாரும் செல்ல முடியாத இடங்களில் கூட டிரோன் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு வருவதை பார்க்க முடிகிறது.
அதிலும் ராணுவத் துறையில் டிரோன் தொழில்நுட்பம் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. அதற்கடுத்தபடியாக தற்போது விவசாயத்தில் மருந்து தெளிப்பதற் காக டிரோன் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
அவ்வாறு விவசாயத்தில் மருந்து தெளிப்பதற்காக டிரோன் தொழில்நுட்பத்தை எவ்வாறு பயன்படுத்துவது? அதற்கான செயல்முறைகள் என்ன? என்பது குறித்து டிரோன் பிறப்பின் முன்னோடியாகத் திகழும் சென்னை குரோம்பேட்டையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின்
எம்.அய்.டி. வளாகத்தில் உள்ள அப்துல் கலாம் ஆளில்லா விமான பயிற்சி நிறுவனம் பயிற்சி அளிக்கிறது.
பெண் பைலட்டுகள்
அந்த வகையில் இதுவரை சுமார் 2 தமிழ்நாட்டில் ஆயிரத்துக்கு இருந்து மேற்பட்டோரும், இதர மாநிலங்களில் இருந்து சுமார் 1,500க்கு மேற்பட்டோரும் பயிற்சி எடுத்து இருப்பதாக கூறப்படுகிறது.
இதற்கு 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். ஆனால், இதுவரை பயிற்சி எடுத்தவர்களில் பெரும்பாலானோர் பட்டதாரிகளாகவே இருக்கின்றனர்.
பயிற்சியை சிறப்பாக முடிப்பவர் களுக்கு அதற்கான சான்றிதழ் வழங்கப்படுகிறது. இந்தச் சான்றிதழை பயன்படுத்தி டிரோன் பைலட்டுகளாக மாறி, விவசாயத்தில் மருந்து தெளிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த டிரோனுக்கு மானியமும், 6 சதவீத வட்டியில் வங்கிக் கடனும் ஏற்பாடு செய்து தரப்படுகிறது. இதனால் நல்ல வருவாயை கொடுக்கும் பணியாக இது மாறி வருகிறது.
அதிலும் தமிழ்நாட்டில் பயிற்சி பெற்ற 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களில், 500-க்கும் மேற்பட்ட பெண்களும் அடங்குவார்கள். இதன் மூலம் அவர்கள் ‘டிரோன் பெண் பைலட்டு’களாக மாறி அசத்தி வருகின்றனர். இவர்கள் மாதம் ரூ.1 லட்சம் வரை சம்பாதிப்பதாக அண்ணா பல்கலைக்கழக
எம்.அய்.டி. விண்வெளி மய்யத்தின் பேராசிரியரும். இயக்குநருமான
கே.செந்தில் குமார் தெரிவித்தார்.
கிராமத்துக்கு ஒரு பைலட்
டிரோன்களை ராணுவத்தில் மட்டுமல்ல – விவசாயத்துக்கும் பயன்படுத்த முடியும் என்று மறைந்த மேனாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் சொன்னது தற்போது சாத்தியமாகி விட்டதாகவும் அவர் கூறினார்.
வாழ்வாதாரத்துக்கான அச்சாரமாக மாறியிருக்கும் இந்த டிரோன் பயிற்சியை அண்ணா பல்கலைக்கழக எம்.அய்.டி. வளாகம் மேலும் விரிவுப்படுத்தி, தமிழ்நாட்டில் 15 ஆயிரம் கிராமங்களில் ஒரு கிராமத்துக்கு ஒரு டிரோன் பைலட் உருவாக்கும் வகையில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அதுவும் பெண் பைலட்டுகள் அதிகம்.
அதில் இருக்கும் வகையில் திட்டமிட்டு வருவதாகவும் பேராசிரியர் செந்தில்குமார் தெரிவித்தார்.