கம்பம், ஜன. 20- 19.1.2025 அன்று கம்பம் கழக மாவட்டத்தில் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு.இரா.குணசேகரன் வீடுதோறும் கழக குடும்பங்களை நேரில் சந்திக்கும் வகையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
மாவட்டச் செயலாளர் ப.செந்தில் குமார் வழிகாட்டுதலில் நடைபெற்ற சந்திப்பில் கழக பேச்சாளர் இரா.பெரியார் செல்வன் பங்கேற்றார்.
காலை ஒன்பது மணிக்கு காமயக் கவுண்டன்பட்டியில் மாவட்ட கழக தலைவர் வெ. தமிழ்ச்செல்வன்-இணையர் சண்முக லெட்சுமி, மகன்கள் இளம்பரிதி,லெனின் ஆகி யோரும் மாவட்ட இளைஞரணி தலைவர் ப.முத்தமிழன் விடுதலை சந்தா வழங்கினார்கள்.
நிகழ்வில் கிளைக் கழகத்தலைவர் சி.முருகன், செயலாளர் ப.அழகேசன், கும ரேசன், செயா,ஆகியோர் பங்கேற்றார்கள். இல்லத்தில் அனைவருக்கும் சிற்றூண்டி வழங்கிமகிழ்ந்தார்கள்.
அடுத்து கடைவீதியில் முடித்திருத்தகம் வைத்துள்ள பெரியார் பெருந்தொண்டர் ரெங்கேசுவரன் விடுதலை சந்தா வழங் கினார்.
அடுத்து கிளைக் கழகத்தலைவர் சி.முருகன் இல்லத்தில் இணையர் பார்வதி, மகள் மு.இலக்கியா, பேரன் அஸ்வந்த் ஆகியோர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் ஓய் வறியா தொண்டுக்கு நன்றி கூறி சிறப்பாக செயலாற்றுவோம் என உறுதி தெரிவித்தார்கள்.
சுருளிப்பட்டியில்…
தொடர்ந்து சுருளிப்பட்டியில் மாவட் டத் துணைத்தலைவர் க.சிவாஇல்லத்தில் நடைபெற்ற சந்திப்பில் இணையர் சுமிலா ,மகன் தமிழ்வாணன் ஆகியோர் விடுதலை சந்தா வழங்கி மகிழ்ந்தார்கள்.
கிளைக் கழக செயலாளர் பா.ஆண்டிச்சாமி பங்கேற்றார். அடுத்து, சில திங்களுக்கு முன் காலமான சுயமரியாதைச் சுடரொளி நாகராசன் இல்லத்தில் அவரது படத்திற்கு மாலை யணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
சுயமரியாதைச் சுடரொளி நாகராசன் நினைவு பெரியார் படிப்பகம், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி நூலகம் அமைப்பது தொடர்பாக இணையர் பொன்னுத்தாய், மகன்கள் மகிழ்நன், மணிசேகரன், மகள்கள் மணிமேகலை, மனோன்மணி, பேரன் தேவன் ஆகியோரிடம் கலந்துரையாடப்பட்டது.
தொடர்ந்து நாராயணதேவன்பட்டியில் பெரியார் பெருந்தொண்டர் வி.பாஸ்கரன் இல்லத்தில் நடைபெற்ற சந்திப்பில், மாவட்டக் கழக துணைச்செயலாளர் பா.முகிலன் விடுதலை சந்தா, வி.மகேந்திரன், இரா.முத்தையா இருவரும் உண்மை சந்தாக்கள் வழங்கி மகிழ்ந்தார்கள்.
பிப்ரவரி திங்களில் பொதுக்கூட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
தொடர்ந்து கூடலூரில் கழக காப் பாளர் டி.பி.எஸ்.ஆர்.சனார்த்தனம்-பிரேமா இல்லத்தில் நடைபெற்ற சந்திப்பில் பெரியார்பெருந்தொண்டர் கருப்புச் சட்டை நடராசன், பகுத்தறி வாளர் கழக தலைவர் டி.பி.எஸ்.ஆர்.அரிகரன் ஆகியோர் பங்கேற்றார்கள். கூடலூரில் தந்தைபெரியார் தமிழர் தலைவர் பிறந்தநாள் விழா, திராவிட மாடல் ஆட்சியின் சாதனைக்கு பாராட்டு விழா நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.