இது சரியா? நிதி அமைச்சரை சாடும் தினமலர் எஸ்.வஸந்தி கோவையில் இருந்து எழுதுகிறார்

1 Min Read

ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையிலான,
ஜி.எஸ்.டி., கவுன்சிலில், வரி விதிப்பு சம் பந்தமான பரிந்துரையில், மசாலா பாப்கார்னுக்கு,12 சதவீதமும், இனிப்பு பாப்கார்னுக்கு 18 சதவீதமும்
ஜி.எஸ்.டி., வரி விதிக்கப்பட்டு உள்ளது!
எதற்குத்தான் ஜி.எஸ். ‘வரி விதிப்பது என்று இல்லையா…
ஏற்கெனவே, வாடகை இடத்திற்கான, 18 சதவீத ஜி.எஸ்.டி., வரியை ரத்து செய்ய, வணிகர்கள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், ரெடிமேடு ஆடைகளுக்கும் ஜி.எஸ்.டி., வரி என்பது என்ன நியாயம்?
ஜி.எஸ்.டி., தவிர, வேறு வரி வருவாய் இல்லையா ஒன்றிய நிதித்துறைக்கு? அமலாக்கத்துறை, வருமான வரித்துறை அவ்வப்போது தனியார் நிறுவனங்களிலும், அரசியல் வாதிகளின் வீடுகளிலும் சோதனை செய்து, கணக்கில் காட்டாத சொத்துக் களை பறிமுதல் செய்வதும் வருவாய் தானே…
நிதி நிறுவன மோசடி களில் பறி முதல் செய் யப்படும் முறைகேடான சொத்துக்களுக்கு தீர்வு உண்டா?
நாட்டில் செயல்படுத்தும் திட்டங்களில் கூட, லாபம் தானே அதிகம் வருகிறது!
ஜி.எஸ்.டி., வரி விதிப்பால், பொருட் களின் விலை ஏறுகிறது; விலை வாசி உயர்வால் பாதிக்கப்படுவது நடுத்தர மக்கள் தான் என்பதை நிதியமைச்சர் நினைவில் வைத்து, வரி விதிப்பில், கொஞ்சம், நியாய, தர்மம் பார்க்கவேண்டும்

– ‘தினமலர்’, 11.01.2025

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *