சென்னை, ஜன.9 “மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விண்ணப்பிக்க இயலாதவர்கள் புதிதாக விண்ணப்பிக்கவும், தகுதிகளை பூர்த்தி செய்யும் மகளிருக்கு உரிமைத் தொகை வழங்கவும் 3 மாதங்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
மகளிர் உதவித் தொகை
சட்டப்பேரவையில் நேற்று (8.1.2025) கேள்வி நேரத்தின்போது, வேடசந்தூர் தொகுதி திமுக உறுப்பினர் எஸ்.காந்திராஜன், தனது தொகுதி மற்றும் தமிழ்நாடு முழுவதும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் எத்தனை பேர் பயன்பெறுகின்றனர், பல்வேறு இடங்களில் ஏழை மக்கள் மனு அளித்தும் அனுமதி யளிக்கப்பட வில்லை என்ற விவரங்களை தெரிவித்தனர். மனு அளித்து தகுதியானவர்கள் அனைவருக்கும் வழங்கப் படுமா? என வினவினார்.
தொடர்ந்து, கொ.ம. தே.க. உறுப்பினர் ஈ.ஆர்.ஈஸ்வரனும், விண்ணப் பித்த தகுதியானவர்களுக்கு உரிமைத் தொகை வழங்கப்படுமா? என கேட்டார். கேள்விகளுக்கு பதிலளித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது:
“திண்டுக்கல் மாவட்டத் தில் மகளிர் உரிமைத் தொகை 5.27 லட்சம் பேர் விண்ணப்பித்ததில், 76 சதவீதம் அதாவது 4 லட்சத்து 897 மகளிர் மாதம் ரூ.ஆயிரம் உரிமைத் தொகை பெறுகின்றனர். வேடசந்தூர் 62 ஆயிரம் மகளிர், உரிமைத் தொகை பெற்று வருகின்றனர்.
மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு தமிழ்நாடு முழுவதும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு 1 கோடியே 63 லட்சத்து 57 ஆயிரத்து 195 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அவற்றை ஆய்வு செய்ததில் 70 சதவீதம் அதாவது 1 கோடியே 6 லட்சத்து 52 ஆயிரத்து 198 விண் ணப்பங்கள் முதல் கட் டமாக ஏற்கப்பட்டன. கடந்த 2023-ஆம் ஆண்டு செப்.15ஆம் தேதி அண்ணா பிறந்த நாளன்று காஞ்சிபுரத்தில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை தொடங்கி வைத்தார்.
அனைத்து மகளிருக்கும் உரிமைத் தொகை
முதல் முறை விண்ணப்பித்து, நிராகரிக் கப்பட்டவர்கள் மேல் முறையீடு செய்யவும் வாய்ப்பு வழங்கப்பட்டது. அதன்படி, கூடுதலாக 9 லட்சம் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன. கடந்த டிசம்பர் மாதம் 15-ஆம் தேதி 1 கோடியே 14 லட் சத்து 65,525 மகளிருக்கு உரிமைத்தொகை வழங் கப்பட்டுள்ளது. தற்போது, திட்டத்தின் விதிகளுக்கு உட்பட்டு எவ்வளவு பேருக்கு கூடுதலாக வழங்க முடியுமோ, அவ்வளவு பேருக்கும் எவரும் விடு படாமல் மகளிர் உரி மைத் தொகை வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். கடந்த முறை விண்ணப்பிக்க இயலாத வர்கள் புதிதாக விண் ணப்பிக்கவும், திட்டத்தின் தகுதிகளை பூர்த்தி செய்யும் மகளிருக்கு உரிமைத்தொகை வழங்க வும் 3 மாதங்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அவர் தெரிவித்தார்.