உற்சாகத்துடன் தொடங்கியது ‘பெரியார் பிஞ்சு’ பழகு முகாம் 2024

பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிகர்நிலை பல்கலைக்கழகம் மற்றும் பெரியார் பிஞ்சு மாத இதழ் இணைந்து நடத்தும் பழகு முகாம் தொடங்கியது. தஞ்சை வல்லம் பகுதியில் உள்ள பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் உள்ள அய்ன்ஸ்டீன் அரங்கில் 28.04.2024 இன்று காலை 11 மணி அளவில் பழகு முகாம் தொடக்க விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் பழகு முகாம் ஒருங்கிணைப்பாளர்கள் புதுவை சிவ. வீரமணி, ச. பிரின்சு என்னாரெசு பெரியார், கல்வியியல் துறை முதுநிலை துணைப் பேராசிரியர் முனைவர் செ. அனுசுயா பிரியா, கட்டடக்கலைத்துறை துணைப் பேராசிரியர் லதா, கட்டட எழில் கலைத்துறை துணை பேராசிரியர் சித்ரா, வேதியியல் துறை இணை பேராசிரியர் முனைவர் மனோகரன், வணிகவியல் துறை இணை பேராசிரியர் முனைவர் சுபேந்திரன், உயிரி தொழில்நுட்ப பொறியியல் துறை பேராசிரியர் மற்றும் பெரியார் மணியம்மை பல்கலைக்கழக ஆராய்ச்சி துறையின் இயக்குநர் முனைவர் எஸ்.குமரன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். புதுவை உள்ளிட்ட தமிழ்நாடு தழுவிய அளவில் இருபால் மாணவர்கள் 75 பேர் கலந்து கொண்டனர். முதல் வகுப்பை முனைவர் எஸ்.குமரன் நடத்தினார்.

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *