இதுதான் கடவுள் சக்தியோ? விநாயகர் சிலைக்கு அணிவித்த ரூ.10,000 பண மாலை திருட்டு! சென்னையில் 6 பேர் கைது!

இணையவழி கையெழுத்து இயக்கம்

சென்னை, செப்.19- விநாயகர் சிலைக்கு அணிவித்த 10 ஆயிரம் ரூபாய் பண மாலையை திருடிச் சென்றதாக 4 இளஞ்சிறார்கள் உட்பட 6 பேரை ஆர்.கே.நகர் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

தண்டையார்பேட்டை நேதாஜி நகர் 3ஆவது தெருவைச் சேர்ந்தவர் விக்னேஷ்வரன் (33). இவர் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, அனுமதி பெற்று தனது வீட்டின் அருகே விநாயகர் சிலை வைத்து வருகிறார். அதன்படி, கடந்த 13ஆம் தேதி விநாயகர் சிலை வைத்து வழிபாடு நடத்தினார்.

தொடர்ந்து, கடந்த 15ஆம் தேதி விநாயகர் சிலைக்கு 100 ரூபாய் நோட்டுகளை கொண்டு தயாரிக்கப்பட்ட ரூ.10 ஆயிரம் பண மாலையை அணிவித்தார். பின்னர் இரவு வரை விநாயகர் சிலை அருகில் இருந்த விக்னேஷ்வரன், அதன்பிறகு வீட்டுக்கு சென்றார். மறுநாள் 16ஆம் தேதி அதிகாலையில் விநாயகர் சிலையை பார்த்தபோது, சிலைக்கு அணிவித்திருந்த ரூ.10 ஆயிரம் பண மாலை காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து அவர், திருட்டில் ஈடுபட்டவர்களை கண்டுபிடித்து, பணத்தை மீட்டு நடவடிக்கை எடுக்க கோரி ஆர்.கே.நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி, காவல் துறையினர் வழக்குப் பதிந்து விசாரித்தனர். முதல் கட்டமாக நிகழ்வு இடத்தில் தீவிர விசாரணை நடத்தினர். மேலும், அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமரா பதிவுகளையும் ஆய்வு செய்தனர்.

அதனடிப்படையில், திருட்டில் ஈடுபட்டதாக கூறப்படும் தண்டையார்பேட்டை நேதாஜி நகர் 3ஆவது தெருவைச் சேர்ந்த ரூபன் (20), பட்டேல் நகர் பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் (19) ஆகிய 2 பேரை போலீஸார் நேற்று கைது செய்யப்பட்டனர். இவர்களுடன் சேர்ந்து திருட்டில் ஈடுபட்டதாக 16 மற்றும் 17 வயதுடைய மேலும் 4 சிறார்களையும் கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *