கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 14.9.2026

இணையவழி கையெழுத்து இயக்கம்

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* இடதுசாரிக் கட்சிகள் தனித்துப் போட்டி? மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத் தேர்தல்களில் போட்டியிட இடதுசாரிக் கட்சிகள் தயாராகின்றன. தமிழ்நாட்டில் நடைபெற உள்ள தேர்தல்களில் தனித்துப் போட்டி யிடவும், அய்ந்து முனைப் போட்டியை உருவாக்கவும் திட்டமிட்டுள்ளன.

* இந்திய புலால் உணவு சுவையானது: ராகுல்: “இந்தியர்களில் 80% பேர் புலால் உணவு உண்பவர்கள்; இந்திய புலால் உணவு மிகவும் சுவையானது” என்று ராகுல் காந்தி கூறினார். பிரிக்ஸ் தலைவர்களுக்கு வழங்கப்பட்ட விருந்தில் சைவ உணவு மட்டுமே வழங்கப்பட்டதை விமர்சித்து, இந்தியாவின் உணவுப் பண்பாட்டில் புலால் உணவுக்கும் இடமுண்டு என்றார்.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* நாகப்பட்டினத்தில் நெல் சாகுபடிக்கு நெருக்கடி – குறுவை அறுவடை 96% சரிவு: மேட்டூர் அணை தாமதமாகத் திறக்கப்பட்டதும், காவிரி நீர் பற்றாக்குறையும் காரணமாக குறுவை சாகுபடி 30,000 எக்டேரிலிருந்து 1,720 எக்டேராக குறைந்துள்ளது.

தி இந்து:

* தமிழ்நாட்டில் மின்வெட்டுக் குறித்து எதிர்க்கட்சித் தலைவர்கள் அரசைக் கண்டனம்: தமிழகத்தில் தொடர் மின்வெட்டு, அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு மற்றும் சட்டம்–ஒழுங்குப் பிரச்சனைகள் அதிகரித்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு.

தி டெலிகிராப்:

* சீனா குறித்து பிரதமருக்கு காங்கிரஸ் 4 கேள்விகள்: ஜெய்ராம் ரமேஷ்: லடாக், அருணாச்சலப் பிரதேச எல்லை மற்றும் வர்த்தகம் உள்ளிட்ட சீனா தொடர்பான 4 கேள்விகளை பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் எழுப்பியுள்ளது. சீன அதிபர் ஷி ஜின்பிங்கை பிரதமர் சந்தித்த மறுநாளே, சீனாவின் “எல்லைப் பகுதி ஆக்கிரமிப்புகள்” குறித்தும் ஜெய்ராம் ரமேஷ் கேள்வி எழுப்பினார்.

டைம்ஸ் ஆப் இந்தியா:

* மாற்றுத்திறனாளிகள் கொள்கை – 10 ஆண்டுகளாக மாற்றமின்றி நிலுவை: தற்போதைய மாற்றுத்திறனாளிகள் சட்டம் இயற்றப்பட்டு 10 ஆண்டுகள் கடந்தும், புதிய தேசிய மாற்றுத்திறனாளிகள் கொள்கையை அரசு இன்னும் வகுக்கவில்லை. ஏற்கனவே நடைமுறையில் உள்ள தேசியக் கொள்கை 20 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்டது.

குடந்தை கருணா

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *