கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 4.8.2026

2 Min Read

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

* 30 ஆண்டுகால பா.ஜ.க. கோட்டையில் பெருஞ் சரிவு; பீகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி: 19000 வாக்குகள் அதிகம் பெற்று, நிதின் நபின் தொகுதியில் வென்று சாதனை. பாஜக அதிர்ச்சி.

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* 498ஏ சட்டத்திற்கு திருமணம் அவசியம் இல்லை லிவ்-இன் ரிலேஷன் உறவிலும் குடும்ப வன்முறை பாதுகாப்பு: உச்சநீதிமன்றம் அதிரடி.

* வினாத்தாள் கசிவு காரணமாக ஜார்கண்டில் நடைபெறும் மாணவர்கள் போராட்டத்திற்கு, சிஜேபி ஆதரவு.

* எத்தனால் கலந்த பெட்ரோலுக்கு எதிர்ப்பு. பிரதமர் வீடு நோக்கி கெஜ்ரிவால் பேரணி.

* டில்லி போராட்டத்தில் மாணவர்கள் மீது வன்முறை; அயோத்தி ராமன் கோயில் உண்டியல் திருட்டு விவகாரம் நாடாளுமன்றத்தில் எதிரொலி; எதிர்க்கட்சிகள் விவாதிக்க ஆர்ப்பாட்டம்.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 34இல் இருந்து 38ஆக  அதிகரிக்கும் திருத்த மசோதா மக்களவையில் எதிர்க்கட்சிகளின் போராட்டத்திற்கு இடையே நிறைவேற்றம்

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* குஜராத்தில் 18,404 கூட்டுறவுச் சங்கங்கள் நட்டத்தில்; 10% செயல்படவில்லை; குஜராத்தில் பதிவு செய்யப்பட்ட கூட்டுறவு சங்கங்களில் சுமார் 10% செயல்படாமல் அல்லது கலைப்பு நிலையில் உள்ளதாகவும், 18,404 செயல்படும் சங்கங்கள் நட்டத்தில் இயங்குவதாகவும் மாநிலங்களவையில் அமைச்சர் தகவல்.

தி இந்து:

* காவிரி நீர் திறப்பை வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனு: கபிணி, கே.ஆர்.எஸ். அணைகளில் இருந்து நீரை திறக்க காவிரி மேலாண்மை ஆணையத்தின் ஜூலை 30 உத்தரவை கருநாடக அமல்படுத்த உத்தரவிடக் கோரி தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

தி டெலிகிராப்:

* ஆர்டிஅய் மனுவால் வந்தது அடுத்த சர்ச்சை: என் சான்றிதழைக் காட்ட நான் தயார் பேரரசர் (பிரதமர் மோடி) தன் டிகிரியைக் காட்டுவாரா? அபிஜித் தீப்கே கேள்வியால் சிக்கித் திணறும் பா.ஜ.க.

டைம்ஸ் ஆப் இந்தியா:

* ஆக.17 முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2ஆம் கட்டம்; ஜாதி, பெற்றோர் பிறப்பிடம் உள்ளிட்ட விவரங்கள் பதிவு. 1931-க்கு பிறகு முதன்முறையாக ஜாதி விவரங்களுடன், பெற்றோரின் பிறந்த தேதி, பிறப்பிடம், விருப்பத்தின் பேரில் ஆதார் மற்றும் கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) எண்களையும் சேகரிக்கும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் 2ஆம் கட்டம் ஆகஸ்ட் 17 முதல் தொடங்குகிறது.

– குடந்தை கருணா

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *