செப்டம்பர் 26இல் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் திண்டிவனம் கழக மாவட்ட கலந்துரையாடலில் தீர்மானம்

1 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

திண்டிவனம், செப். 11- திண்டிவனம் மாவட்டக் கலந்து ரையாடல் கூட்டம் 5.9.2026 அன்று மாவட்ட இளைஞரணித் தலைவர் மு. இரமேஷ் இல்லத் தில் மாவட்டத் தலைவர் இர.அன் பழகன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது…

மாவட்ட இளைஞரணித் தலைவர் மு.இரமேஷ் அனை வரையும் வரவேற்று பேசினார். மாவட்டச் செயலாளர் தா.இளம்பரிதி, மாவட்டக் காப்பாளர் செ.பரந்தாமன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் தா.தம்பிபிரபாகரன், மாவட்ட துணைத் தலைவர் ச.அன்புக்கரசன், மாவட்ட துணைச் செயலாளர் ஏ.பெருமாள், பொதுக்குழு உறுப்பினர்கள் பா.வில்ல வன்கோதை, தா.விஜயலட்சுமி தாஸ், நகரச் செயலாளர் சு.பன்னீர் செல்வம்,ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் நகர இளைஞ ரணித் தலைவர் ஓவியர் செந்தில், ப.க நகரச் செயலாளர் மா.குமார், மானூர் பா.செந்தில், ஒலக்கூர் ஒன்றிய துணைத் தலைவர் விநாயகமூர்த்தி, ஒலக்கூர் ஒன்றியச் செயலாளர் நா.இராஜராம், ஒலக்கூர் ஒன்றிய துணைச் செயலாளர் ப.அருள், மகளிரணி தோழியர் கஸ்தூரி, அமலா, தேன்மொழி. பெரியார் பிஞ்சுகள் கவிநிலவன், கவிஅமுதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிழ்ச்சியில் திண்டிவனம் முதல் புதுச்சேரி வரை நான்கு நாட்கள் நடைபெற்ற நீட் எதிர்ப்பு இரு சக்கர வாகன நான்காம் குழுவின் பிரச்சார ஒருங்கிணைப்பாளர் தா.தம்பி பிரபாகரனுக்கு சிறப்பு செய்யப் பட்டது. நகர தலைவர் உ.பச்சை யப்பன் நன்றியுரை கூறினார்.

தீர்மானங்கள்

தந்தை பெரியாரின் பிறந்தநாளை சிறப்பாக கொண் டாடுவது,

தந்தை பெரியார் படத்தை வைத்து நகர ஊர்வலம்,

அனைத்து ஒன்றியங்களுக்கும் சென்று கழகக் கொடி ஏற்றுதல்,

செப்டம்பர் 26 அன்று தந்தை பெரியார் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடத்துவது,

தலைமை செயற்குழு தீர்மானங்களை நிறைவேற்றுவது. எனக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *