‘எதிர்நீச்சலில் வென்ற பெரியார்’ 80ஆம் ஆண்டு விழா மாநாடு (சிவகங்கை, 22.8.2026)

1 Min Read

சிறப்பு புத்தக சலுகைகள்

சிவகங்கை மற்றும் காரைக்குடி மாவட்ட சுயமரியாதைச் சுடரொளிகள் படங்கள் அடங்கிய பதாகையினை கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் பார்வையிட்டார்.

திராவிடர் கழகம்

சிவகங்கை மாவட்டத் தலைவர் ச.அனந்தவேல் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து வரவேற்றார். உடன் சிவகங்கை மாவட்ட காப்பாளர் வழக்குரைஞர் ச.இன்பலாதன், காரைக்குடி மாவட்ட காப்பாளர் சாமி.திராவிடமணி, தி.மு.க. வடக்கு ஒன்றிய செயலாளர் ஆ.முத்துராமலிங்கம், பொதுக்குழு உறுப்பினர் இர.புகழேந்தி, சிவகங்கை மாவட்ட செயலாளர் பெரு.ராசாராம், காரைக்குடி மாவட்ட தலைவர் கு.வைகறை, மாவட்ட செயலாளர் சி.செல்வமணி, கழக சொற்பொழிவாளர் தி.என்னாரெசு பிராட்லா ஆகியோர் உள்ளனர். காரைக்குடி மாவட்ட துணைத் தலைவர் தேவகோட்டை மணிவண்ணன், ஒன்றிய செயலாளர் வாரியர் வயல் ஜோசப் ஆகியோர் பயனாடை அணிவித்தனர்.

திராவிடர் கழகம்

சிவகங்கையில் தந்தை பெரியார் மற்றும் பேரறிஞர் அண்ணா ஆகியோர் ஊர்வலமாக வந்த போது ஸநாதனிகள் செருப்புத் தோரணம் கட்டி அவமதித்த அதே இடத்தில் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களை சிவகங்கை மாவட்டத் தலைவர் ச.அனந்தவேல், தி.மு.க. ஒன்றிய செயலாளர் ஆ.முத்துராமலிங்கம், பொதுக்குழு உறுப்பினர்கள் மணிமேகலை, சுப்பையா, இர.புகழேந்தி, தி.மு.க. நகர்மன்ற உறுப்பினர்கள் பயனாடை அணிவித்து வரவேற்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *