லக்னோ, ஆக. 22- உத்தரப் பிரதேச மாநிலத்தின் நீதிமன்றம் ஒன்றில், கடந்த நான்கு மாத இடைவெளியில் 22 குற்றவாளிக ளுக்கு மரண தண்டனை விதித்து நீதிபதி ரவிகுமார் திவாகர் உத்தர விட்டுள்ளார்.
நீதிபதி ரவிகுமார் திவாகர், மிகக் குறுகிய காலத்தில் இத் தனை மரண தண்டனைத் தீர்ப்புகளை வழங்கியிருப்பது சட்ட வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இவருடைய நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த சுமார் 100 கொலை வழக்குகள், நிர்வாகக் காரணங்களுக்காகவும், விசா ரணை நடைமுறைகளைச் சீரமைப்ப தற்காகவும் வேறு நீதிமன்றங்களுக்கு மாற்றப்பட்டுள்ளன.
வழக்குகளை விரைந்து முடிப்பதிலும், கடுமையான தண்டனைகளை வழங்குவதிலும் இந்த நீதிபதி மிகுந்த முனைப்புடன் செயல்பட்டு வருவதாகக் கூறப்படு கிறது. இருப்பினும், வழங்கப்பட்ட மரண தண்டனைத் தீர்ப்புகள் மற்றும் வழக்குகள் மாற்றப்பட்ட விதம் குறித்து பல்வேறு தரப்பினரும் தங்கள் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
