பாட்னா, ஆக.20- பீகார் மாநிலம் நாளந்தா மாவட்ட அரசு நடுநிலைப் பள்ளியில் கடந்த 18.8.2026 அன்று தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று வழங்கிய மதிய உணவில், உப்புக்குப் பதில் சமையல்காரர் தவறு தலாகச் சலவைத் தூள் கலந்துவிட்டார். இந்த சோயாபீன் சாதத்தை சாப்பிட்ட 36 மாணவிகளுக்குத் தலைசுற்றலும், வாந்தியும் ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட மாணவிகள் அனைவரும் பீகார் ஷரீப் சர்தார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். உணவில் உப்பு இல்லை என்று மாணவிகள் புகாரளித்த நிலையில், ஒரே இடத்தில் வைக்கப்பட்டிருந்த உப்பு, சலவைத் தூள் டப்பாக்களால் குழப்பம் ஏற்பட்டு இவ்வாறு நடந்துள்ளது என்று அமைச்சர் தெரிவித்தார்.
