மதுரா, ஆக. 16- உத்தரப் பிரதேச மாநிலம் மதுராவில் உள்ள நாட்டின் முன்னணி கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை வளாகத்தில் சுதந்திர நாள் விழா கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட உத்தரப் பிரதேச மாநில அமைச்சர், கொடியை ஏற்றி வைத்து மரியாதையைச் செலுத்தினார்.
தொடர்ந்து, பாதுகாப்புப் படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்வதற்காக, சிறப்பாக அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் அமைச்சர் ஏறினார். அப்போது எதிர்பாராதவிதமாக அந்த வாகனம் பழுதாகி பாதியிலேயே நின்றது.
வேறொரு வாகனத்தை உடனடியாக ஏற்பாடு செய்ய நேரமின்மை காரணமாக, சற்றும் தாமதிக்காமல் காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அந்த வாகனத்தைப் பின்புறமாகத் தள்ளத் தொடங்கினர்.
அதிகாரிகள் காரைத் தள்ளிக்கொண்டே செல்ல, அதில் நின்றபடி அமைச்சர் பாதுகாப்புப் படையினரின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
காவல்துறை உயரதி காரிகள் வாகனத்தைத் தள்ளியவாறு செல்ல, அமைச்சர் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்ட இச்சம்பவத்தின் ஒளிப்படம் மற்றும் காட்சிப்பதிவு சமூக வலைதளங்களில் வெளியாகி நகைப்புக் குள்ளாக்கிவருகிறது.
