மெரினா கடற்கரை உள்பட 44 இடங்களில் இலவச வைஃபை வசதி

சிறப்பு புத்தக சலுகைகள்

சென்னை,ஆக. 13- சென்னை மாநக ராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

முதலமைச்சரின் உத்தரவுப்படி சென்னையில் மக்கள் அதிகம் வந்து செல்லும் கடற்கரை பகுதிகள், விளையாட்டுத் திடல்கள், பூங்காக்களில் மக்கள் தங்குதடையின்றி இணைய பயன்பாட்டை மேற்கொள்ளும் விதமாக உயர்தரத்தில் இலவச வைஃபை வசதி வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப் பட்டுள்ளன.

அதன்படி முதல் கட்டமாக மாநகராட்சிக்கு உள்பட்ட மெரினா கடற்கரை பகுதியில் உழைப்பாளர் சிலை முதல் கலங்கரை விளக்கம் வரை 27 இடங்களிலும், பெசன்ட் நகர் கடற்கரை பகுதியில் 5 இடங்களிலும், தலைமைச் செயலக பூங்காவில் 12 இடங்களிலும் என மொத்தம் 44 இடங்களில் 10.8.2026 முதல் இலவச வைஃபை வசதி பயன் பாட்டுக்கு கொண்டு வரப் பட்டுள்ளது.

இந்த சேவையை பயன்படுத்த பொதுமக்கள் தங்களது கைப்பேசியில் வைஃபையை ஆன் செய்து, ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ள க்யூ-ஆர் கோட்-அய் ஸ்கேன் செய்ய வேண்டும். அதன் மூலம் வரும் ஓடிபி எண்ணை பதிவு செய்து வைஃபை வசதியை பெற்றுக்கொள்ளலாம். மக்கள் இதனை இலவச மாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *