பகுத்தறிவாளர் கழகம் நடத்திய அறிவியலும் சமூகநீதியும் – கருத்தரங்கம்

1 Min Read

சிறப்பு புத்தக சலுகைகள்

சென்னை, ஆக. 11- பகுத்தறிவாளர் கழகம் சார்பில் 8.8.2026 அன்று மாலை 6.30 மணியளவில் சென்னை பெரியார் திடலில் உள்ள அன்னை மணியம்மையார் அரங்கில் ‘‘அறிவியலும் சமூகநீதியும்” என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.

அவ்வை நன்னன் இணைப்புரையுடன் நடைபெற்ற இக்கருத்தரங்கில் வடசென்னை மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் ஆர்.சண்முகநாதன் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார்.

பகுத்தறிவாளர் கழக மாநிலத் தலைவர் இரா.தமிழ்ச்செல்வன் தலைமைரையாற்ற, டிரான்கன் டைனமிக்ஸ் நிறுவன அதிகாரி ரோபாடிக்ஸ் மற்றும் ஏ.அய். வல்லுநர் முனைவர் கெனித்ராஜ் அன்பு “அறிவியலும் சமூகநீதியும்” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். தென்சென்னை மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் மு.இரா.மாணிக்கம் நன்றி கூறினார். இந்நிகழ்வில் அரும்பாக்கம் சா.தாமோதரன் தமிழர் தலைவர் அறிக்கையை வாசித்தார். பகுத்தறிவாளர் கழகப் பொதுச் செயலாளர் ஆ.வெங்கடேசன் நிகழ்வை ஒருங்கிணைத்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *