அமைதி ஒப்பந்த நிபந்தனைகள் அமலாகாதவரை அமெரிக்காவுடன் பேச்சு கிடையாது: ஈரான்

2 Min Read

டெஹ்ரான், ஆக. 10- ஈரான் தலைநகா் டெஹ்ரானில் செய்தியா ளா்களுக்கு பேட்டியளித்த அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சா் அப்பாஸ் அராக்சி கூறுகையில், ‘ஈரான்-அமெரிக்கா இடையே கையொப்பமான புரிந்துணா்வு அமைதி ஒப்பந்த விதிகள் மீறப் படுவது நிறுத்தப்படும் வரை, அமெரிக்காவுடன் பேச்சு நடத்த மாட்டோம். ஓமனுடன் ஹோர்முஸ் நீரிணையில் புதிய கடல்வழிப் போக்குவரத்து பாதைகளை ஏற்படுத்துவது குறித்து நடத்தப்பட்டுவரும் பேச்சுவார்த்தை இறுதிக் கட்டத்தில் உள்ளது.

இதை ஹோர்முஸ் நீரிணை மீண்டும் திறக்கப் பட இருக்கிறது என்று அா்த்தம் கொள்ளக் கூடாது. கப்பல் போக்குவ ரத்து பாதைகள் குறித்து ஒப்பந்தம் எட்டப்படலாம். ஆனால், நீரிணையை மீண்டும் கப்பல் போக்குவரத்துக்குத் திறப்பது என்பது பிற நிபந்தனைகள் எப்படி செயல்படுத்தப்படுகிறது என்பதைப் பொருத்தே இருக்கும். இதை சமரசம் செய்பவர்கள் மூலம் அமெரிக்காவுக்கு தெரியப்படுத்திவிட்டோம்’ என்றார்.

ஈரான் புதிய நிபந்தனை

ஈரானில் அதிகார முக்கியத்துவம் வாய்ந்த முக்கிய அமைப்பாக கருதப்படும் தேசிய பாதுகாப்பு கவுன்சில் தரப்பில், அமெரிக்கா தனது தவறுகளைத் திருத்தி கொள்ளாதவரை ஹோர்முஸ் நீரிணை மீண்டும் திறக்கப் படாது எனத் தெரிவிக்கப்பட் டுள்ளது.

இதுகுறித்து அந்த கவுன்சிலின் செயலரும், புரட்சிகர பாதுகாப்புப் படையின் கமாண் டருமான முகம்மது பாஹா் ஜோல்காதா் கூறுகையில், ‘ஈரானை அமெரிக்கா மீண்டும் மிரட்டக் கூடாது. ஈரான் மற்றும் மேற்காசிய பகுதியில் உள்ள ஈரானின் கூட்டாளிகளுடனான போரை நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டு வர வேண்டும்.

இந்த பகுதியில் உள்ள அமெரிக்க படை களைத் திரும்பப் பெற வேண்டும். போரால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு அமெரிக்கா இழப்பீடு அளிக்க வேண்டும். பொரு ளாதாரத் தடைகளை நீக்க வேண்டும். ஈரான் சொத்துகள் மீதான முடக்கத்தை நிபந்தனை யின்றி நீக்க வேண்டும்’ என்றார்.

இந்நிலையில், ஈரான் போர் காரணமாக அமெ ரிக்கா இருப்பு வைத்திருந்த ஆயுத தளவாடங்கள் குறைந்து விட்டதாகவும், இதையடுத்து, ஆயுத உற்பத்தியை அதிகரிக் கும்படி ஆயுத தள வாட உற்பத்தி நிறுவனங் களை அமெரிக்க அரசு அறிவுறுத்தியிருப்பதா கவும் தகவல்கள் வெளி யாகியுள்ளன.

மேற்காசிய போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து ஈரான், அமெரிக்கா இடையே கடந்த ஜூன் மாதம் இடைக்கால அமைதி ஒப்பந்தம் கையொப்ப மானது. எனினும், இரு நாடுகளும் ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்தி வருகின்றன. மறுபக்கம் ஈரானும், அமெரிக்காவும் சமரசவாதிகள் மூலம் பேச்சுவார்த்தைக்கான முயற்சியையும் எடுத்து வருகின்றன என்பது குறிப் பிடத்தக்கது.

இடைக்கால அமைதி ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை அமல்படுத்தாதவரை அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்பட மாட்டாது என்று ஈரான் நேற்று (9.8.2026) உறுதிபடத் தெரிவித்தது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *