ராஞ்சி, ஆக.9- ஜார்க்கண்ட் வினாத்தாள் கசிவு போராட்டத்தில் அகில இந்திய மாணவர் சங்கத் தலைவர் நேஹா போரா மீது மை வீச்சு தாக்குதல் நடத்தப் பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.
கோரிக்கைகளை நிறைவேற்றா விட்டால் ஜார்க்கண்ட் சட்டப் பேரவையை நோக்கி ஆகஸ்ட் 10 ஆம் தேதி பேரணி செல்லத் திட்டமிட்டுள்ளதாக அம்மாநில மாணவர் அமைப்பு தெரிவித் துள்ளது.
கடந்த சில நாள்களாக ராஞ்சி நகரில் பெய்துவரும் கனமழையும் பொருள்படுத்தாமல் ஆயிரக்கணக்கான மாணவர்கள் போராடி வரும் நிலையில், அகில இந்திய மாணவர்கள் சங்கத்தினரும் அவர்களுக்கு ஆதரவாகப் போராட் டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தப் போராட்டம் 14ஆவது நாளை எட்டியுள்ள நிலையில், ஆறு பேர் காலவரையற்ற உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும், ஜார்க்கண்ட் அரசுடனான எந்தப் பேச்சுவார்த்தைகளும் முன்னேற்றம் ஏற்படவில்லை.
மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்து இடதுசாரி அமைப்பு களான அகில இந்திய மாணவர் கூட்டமைப்பு மற்றும் அகில இந்திய மாணவர்கள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டு ஜார்க்கண்ட் சட்டப்பேரவையை நோக்கி பிர்சா சவுக் அருகே பேரணியில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், அகில இந்திய மாணவர்கள் சங்கத்தின் தலைவர் நேஹா போரா மீது மை வீச்சு தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மை வீசித் தாக்குதல் நடத்தியவர் பாஜகவைச் சேர்ந்த என்று அகில இந்திய மாணவர்கள் சங்கத்தினர் குற்றம்சாட்டியுள்ள நிலையில், தாக்குதல் நடத்தியவரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.
