புதுடில்லி, ஆக.9- தமிழ்நாடு, கருநாடகா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் கிராமப்புற மக்கள், விவசாயிகள் மற்றும் கடின உழைப்பில் ஈடுபடும் தொழிலாளர்கள் இடையே காரணம் அறியப்படாத நாள்பட்ட சிறுநீரக நோய் (CKDu) வேகமாக அதிகரித்து வருவது குறித்து நாடாளு மன்றக் குழு எச்சரித்துள்ளது.
இந்நோய் குறித்து விரிவாக ஆராயவும், தீவிரக் கண்காணிப்பு அமைப்பை உருவாக்கவும் ஒன்றிய அரசுக்கு அக்குழு பரிந்துரைத்துள்ளது.
சமாஜ்வாதி கட்சி நாடாளுமன்ற உறுப் பினர் ராம் கோபால் தலைமையிலான சுகா தாரத்துக்கான நாடாளு மன்ற நிலைக்குழு சமர்ப் பித்துள்ள அறிக்கையில் ,தமிழ்நாடு, கருநாடகா, ஆந்திரா, சத்தீஸ்கர், ஒடிசா, மகாராட்டிரா மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களில் இந்நோயின் தாக்கம் கண்டறியப்பட்டுள்ளதாகச் சுட்டிக ்காட்டப்பட்டுள் ளது. இந்தியாவில் சுமார் 15 மாநிலங்களில் இந்நோயின் தாக்கம் இருப்பது கண்டறி யப்பட்டுள்ளது.
சிறுநீரக நோய்களுக்குப் பொதுவாக நீரிழிவு (31 சதவீதம்) மற்றும் உயர் குருதிஅழுத்தம் (13%) ஆகியவையே முக் கியக் காரணங்களாக இருக் கின்றன. ஆனால், இந்நோய் எந்தவொரு முந்தைய உடல்நலப் பாதிப்பும் இல்லாத குறைந்த வருவாய் கொண்ட இளம் விவசாயத் தொழிலாளர்களை (16 சதவீதம்) அதிகம் தாக்குகிறது.
அதிக வெப்பம், தொடர் நீர்ச்சத்து குறை பாடு, பூச்சிக்கொல்லி மருந்துகள், சுகாதாரமற்ற குடிநீர் மற்றும் கன உலோகங்களின் தாக்கம் ஆகியவை இதற்குக் கார ணமாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. பருவநிலை மாற்றத்திற்கும் இதற்கும் இடையிலான தொடர்பையும் ஆராய வேண்டும் என நாடாளு மன்றக் குழு வலியுறுத்தி யுள்ளது. இந்தியாவில் சில கிராமப்புறப் பகுதிகளில் 18 முதல் 20 சதவீத மக்கள் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக வல்லுநர்கள் தெரிவிக் கின்றனர். இதைக் கட் டுப்படுத்த மாவட்ட அளவிலான கண்கா ணிப்பு, வேலை செய் யும் இடங்களில் பாது காக்கப்பட்ட குடிநீர் வழங் குதல் மற்றும் அதிக வெப்பத்தில் பணியாற் றுபவர்களுக்கு இடை வேளை அளித்தல் போன்ற நடவடிக்கைக ளுடன் கூடிய தேசிய தடுப்பு மற்றும் கண்காணிப்பு வழிகாட் டுதலை உருவாக்க இந்த குழு பரிந்துரைத்துள்ளது.
