காரைக்குடி, ஆக.4- சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா அரசு மாடல் பள்ளி வளாகத்தில், 2.8.2026 அன்று மாவட்ட அளவிலான சிலம்பாட்டப் போட்டிகள் நடைபெற்றது.
இப்போட்டிகளை துவக்கி வைக்க அமைச்சர் பிரபு பள்ளி வளாகத்தில் நுழைந்தார். அப்போது நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் சொல்லி கொடுத்தது போல் பள்ளி சிறுவர்கள் அனைவரும் இணைந்து, ‘டிவிகே, டிவிகே’ என முழக்கமிட்டனர். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் கையில் ஒலிபெருக்கியை வைத்துக் கொண்டு இதனை ஒலிப்பெட்டியின் வழியாக ஒலிபரப்பினார். கல்வித் துறையின் உத்தரவையும் மீறி மாணவர்களின் முழக்கத்தை அமைச்சர் ரசித்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
