நீதி பரிபாலன லட்சணம் கடந்த 30 ஆண்டுகளாக உச்சநீதிமன்றத்தில் 10 ஆயிரம், உயர்நீதிமன்றங்களில் 80 ஆயிரம் வழக்குகள் தேக்கம்

1 Min Read

புதுடில்லி, ஆக. 4 நாடாளு மன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு ஒன்றிய சட்டத் துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் எழுத்து பூர்வமாக அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:

நீதிமன்ற உள்கட்டமைப்பு, மேம்பாட்டிற்காக கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் ரூ.9,800 கோடிக்கு மேல் செல விடப்பட்டுள்ளது. ஆனாலும், உச்ச நீதிமன்றத்தில் 10,000-க்கும் அதிகமான வழக்குகள் 10 ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் உள்ளன. இதில் 558 வழக்குகள் 20 ஆண்டுகளையும், 26 வழக்குகள் 30 ஆண்டுகளையும் கடந்து விட்டன.

அதேவேளையில், நாட்டின் 25 உயர் நீதிமன்றங்களில் 80,000-க்கும் மேற்பட்ட வழக்குகள் 30 ஆண்டுகளுக்கு மேலாகத் தேங்கிக் கிடக்கின்றன.

போதுமான நீதிபதிகள் மற்றும் பணியாளர்கள் இல்லாதது, உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் வழக்குகளின் சிக்கலான தன்மையே விசாரணை வேகத்தை தீர்மானிக்கின்றன.

தற்போது உயர் நீதிமன்றங் களில் அனுமதிக்கப்பட்ட 1,122 நீதிபதி பணியிடங்களில் 341 இடங்கள் காலியாக உள்ளன. அதேபோல, கீழை நீதிமன்றங்களில் உள்ள 30,868 அனுமதிக்கப்பட்ட பணியிடங்களில் 7,311 இடங்கள் காலியாக உள்ளன. நீதிபதிகளை நியமிப்பதில் உயர் நீதிமன்ற கொலீ ஜியங்கள் காட்டும் தாமதமே இதற்குக் காரணமாக அமைகிறது.

5 ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் உள்ள வழக்கு களை விரைந்து முடித்து வைப்பதற்காக, 25 உயர் நீதிமன்றங்களிலும் மற்றும் மாவட்ட நீதிமன்றங் களிலும் ‘நிலுவை வழக்குகள் தீர்வுக் குழுக்கள்’ அமைக்கப் பட்டுள்ளன.

மேலும், வழக்குகளின் தேக்கத்தைக் குறைக்கும் நோக்கில் அரசு பல்வேறு முக்கியச் சட்டத் திருத்தங்களைக் கொண்டு வந்துள்ளது.

அன்படி, 2023-ஆம் ஆண்டின் புதிய குற்றவியல் சட்டங்கள், காசோலை உள்ளிட்ட மாற்று முறை ஆவணங்கள் திருத்தச் சட்டம் (2018), வணிக நீதி மன்றங்கள் திருத்தச் சட்டம் (2018) மற்றும் குறிப்பிட்ட பரிகாரத் திருத்தச் சட்டம் (2018) ஆகியவை இயற்றப்பட்டு நடை முறைப்படுத்தப்பட்டு வருகின்றன. இவ்வாறு ஒன்றிய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *