மதுரை, ஆக. 2- பால் பாக்கெட்டுகளில் ரசாயன நெடி வீசுவதாக நுகர்வோரிடமிருந்து புகார் கள் எழுந்ததை அடுத்து, பால் பாக்கெட் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் 160 பாலித்தீன் ஃபிலிம் ரோல்களை மதுரை ஆவின் நிர்வாகம் பெங்களூரு நிறுவனத்திற்கே திருப்பி அனுப்பியுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் உள்ள ஆவின் நிறுவனங் களுக்குப் பால் பாக்கெட் தயாரிப்பதற்கான பாலித்தீன் ஃபிலிம்களை பெங்களூரைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று விநியோகம் செய்து வருகிறது. அண்மையில் விநியோகிக்கப்பட்ட ஆவின் பால் பாக்கெட்டு களில் ஒருவித ரசாயன வாடை அடிப்பதாகப் பொதுமக்கள் மற்றும் விநியோகஸ்தர்களிடம் இருந்து புகார்கள் வந்தன. இதன்பேரில் ஆவின் அதிகாரிகள் நடத்திய ஆய்வில், விநி யோகம் செய்யப்பட்ட பாலித்தீன் ரோல்களின் தரக்குறைபாடே இந்த நெடிக்குக் காரணம் எனத் தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து, முதற்கட்டமாக மதுரை ஆவின் மண்டலத்திற்கு வந்த 160 பாலித்தீன் ஃபிலிம் ரோல்களைப் பயன்படுத்தாமல், அவற்றை உடனடியாகச் விநியோகம் செய்த நிறுவனத்திற்கே திருப்பி அனுப்ப ஆவின் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும், பாலின் தரத்தையும் நுகர்வோரின் பாதுகாப்பையும் உறுதி செய்யத் தேவையான மாற்று ஏற்பாடுகள் தீவிர மாகச் செய்யப்பட்டு வரு கின்றன.
