திருவனந்தபுரம், ஜூலை 31 கேரளத்தில், துலாபாரம் நேர்த்திக்கடன் செலுத்துகையில் தராசு உடைந்ததால் பாஜக சட்டமன்ற உறுப்பினர் முரளிதரன் காயமடைந் துள்ளார். திருவனந்தபுரத்தில் உள்ள பவுர்ணமிக்காவு கோயிலில், 29.7.2026 அன்று இரவு கேரள பாஜக மூத்த தலைவரும், கழுக்கூட்டம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான வி. முரளிதரன் துலாபாரம் நேர்த்திக்கடன் செலுத்தினார்.
இதனைத் தொடர்ந்து, தராசில் தனது எடைக்கு நிகராக வாழைப்பழங்களைக் காணிக்கையாக அளித்து அவர் நேர்த்திக்கடன் செலுத்தும்போது தராசின் கயிறு அறுந்து அவர் கீழே விழுந்தார்.
இந்த நிகழ்வில் முரளிதரனின் கால்களில் காயங்கள் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, சடங்குகள் நிறுத்தப்பட்டு, உடனடியாக அவர் அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அங்கு, மருத்துவர்கள் மேற்கொண்ட பரிசோதனையின் மூலம் அவருக்கு எலும்பு முறிவு ஏற்படவில்லை என உறுதி செய்யப்பட்டது. இதனால், காயங்களுக்கு சிகிச்சை பெற்ற பின்பு முரளிதரன் வீடு திரும்பியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தால் அங்கு மிகவும் பரபரப்பான சூழல் நிலவியது.
