வெறும் 24 ஆயிரம் பேர் பேசும் சமஸ்கிருதத்தைக் கற்பிக்க 6,100 பேர்; தமிழுக்கு வெறும் 12 ஆசிரியர்களா? ஏன் இந்த ஓரவஞ்சனை? சு.வெங்கடேசன் எம்.பி. கேள்வி

3 Min Read

புதுடில்லி, ஜூலை 29 நாடு முழுவதும் பிஎம்சிறீ திட்டத்தின் கீழ் இயங்கும் பள்ளிகளில் 6,102 சமஸ்கிருத ஆசிரி யர்கள் நியமிக்கப்பட்டிருப்பதாக மக்க ளவையில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் எழுப்பிய கேள்விக்கு ஒன்றிய கல்வி அமைச்சகம் பதிலளித்துள்ளது.

நாடாளுமன்றத்தில் மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், “நாடு முழுவதும் பிஎம்சிறீ திட்டத்தின் கீழ் இயங்கும் பள்ளிகள் எத்தனை?, ஹிந்தி அல்லாத தாய்மொழி களுக்காக நியமிக்கப்பட்ட ஆசிரியர்களின் எண்ணிக்கை எவ்வளவு?” ஆகிய கேள்வி களை ஒன்றிய கல்வி அமைச்சகத்திடம் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர்  சு.வெங்க டேசன் கேட்டிருந்தார்.

இந்த கேள்விகளுக்கு மத்திய கல்வித்துறை இணையமைச்சர் ஜெயந்த் சவுத்ரி எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ளார்.

அதில், நாடு முழுவதும் 13,092 பள்ளிகள் பிஎம்சிறீ திட்டத்தின் கீழ் இயங்குவதாகவும், இதனை 14,000-க்கும் மேல் உயர்த்துவதற்கான இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருப்பதாகவும் தெரி வித்துள்ளார். தரவுகளின்படி, அதிகபட்சமாக உத்தரப்பிரதேசத்தில் 1,888 பள்ளிகள் இயங்குகின்றன. நாடு முழுவதும் சமஸ்கிருதத்துக்கு 6,102 ஆசிரியர்கள், பிற தாய்மொழிகளைக் கற்பிக்க 9,152 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் பிஎம்சிறீ திட்டத்தின் கீழ் இயங்கும் 36 பள்ளிகளில் 41 சமஸ்கிருத ஆசிரியர்களும், 12 தமிழ் ஆசிரியர்களும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தரவுகளை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள சு.வெங்கடேசன் தெரிவித்தி ருப்பதாவது:

‘‘கொடுமை! 24,000 பேர் பேசும் சமஸ்கிருதத்தைக் கற்பிக்க 6,100 ஆசிரி யர்கள் நியமனம்.

ஏழு கோடி மக்கள் பேசும் தமிழை கற்பிக்க 12 ஆசிரியர்கள் மட்டுமே நியமனம். மத்தியப் பிரதேசம், பீகார், ராஜஸ்தான், ஒடிசா ஆகிய மாநிலங்களில் அனைத்து பள்ளிகளுக்கும் சமஸ்கிருத ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டாகிவிட்டது. இதுதான் பிரதமர் மோடி பெருமை பேசும் ‘பிஎம்சிறீ பள்ளியின் புள்ளிவிவரம்.

மும்மொழி என்பது ஹிந்தி, சமஸ்கிருதத் திணிப்புதான். மாநில மொழி ஊக்குவிப்பு என்பது ஏமாற்றே! அமைச்சர் பதிலில் அம்பலம். பி.எம்.சிறீ திட்டம் என்பதில் நாங்கள் மும்மொழியை வலியுறுத்துவது இந்திய மொழிகளை, மாநில மொழிகளை வளர்ப்பதற்கே என்று ஒன்றிய ஆட்சி யாளர்கள் வாய் பந்தல் போட்டு வந்திருக்கி றார்கள். ஆனால் இந்த பதிலில் சமஸ்கிருத ஆசிரியர்களே அதிக அளவில் 6,102 பேர் நியமிக்கப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது.

எட்டாவது அட்டவணையில் உள்ள மொழிகளிலேயே மிகக் குறைவான பேர் அதாவது 24,821 பேர் மட்டுமே அதாவது 0.002 சதவிகிதம் பேர் பேசுகிற சமஸ்கிருதத்திற்கு 6,102 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது சாக்குக்குள் ஒளிந்திருக்கும் பூனை சமஸ்கிருதம் என்பதைத் தெளிவாக அம்பலப்படுத்தியுள்ளது. இரண்டாவது மொழியாக, மூன்றாவது மொழியாக சமஸ்கிருதத்தைப் பேசுபவர்களைச் சேர்த்தால் கூட ஒரு சதவீதம் கூட வர வில்லை. கால் சதவீதமே ஆகும். ஒளியாத பூனையாக ஹிந்தி ஏற்கெனவே சுற்றி வந்து கொண்டிருக்கிறது.

அவிழ்த்துவிட்ட கதைகள்

அமைச்சரின் பதிலில் மாநில மொழி என தரப்பட்டுள்ள எண்ணிக்கை அந்தந்த மாநிலத்தின் மொழிகள் என்றுதான் புரிந்து கொள்ள வேண்டியுள்ளது. காரணம் மொழி வாரியாக பட்டியல் என்றே பதிலில் தரப்பட்டுள்ளது. வேறு மாநில மொழிகள் எனில் அந்த விவரம் தரப்பட்டிருக்கும்.

மத்தியப் பிரதேசத்தில், ராஜஸ்தானில், உத்தரப் பிரதேசத்தில் தமிழ் மூன்றாம் மொழியாக வரலாம் என்றெல்லாம் இங்கு கதைகளை அவிழ்த்து விட்டார்கள். ஆனால் சமஸ்கிருத ஆசிரியர்கள் மத்தியப் பிரதேசத்தில் 1,211 பேர். இது அங்குள்ள பள்ளிகளின் எண்ணிக்கையை விட அதிகம் (944 பள்ளிகள்). ஒரு பள்ளிக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட சமஸ்கிருத ஆசிரியர்கள் நிய மிக்கப்பட்டுள்ளனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *