கோயிலில் ரூ.100 கோடி நில மோசடி ஓய்வு பெற்ற நீதிபதி கண்காணிப்பில் விசாரிக்க கோரி புதிய வழக்கு! மதுரை உயர்நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை

2 Min Read

சிறப்பு புத்தக சலுகைகள்

மதுரை, ஜூலை 26- பழனி கோயில் ரூ.100 கோடி நில மோசடி விவகாரம் தொடர் பான விசாரணையை ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி கண்காணிக்கும்படி உத்தரவிடக் கோரி மதுரை உயர்நீதி மன்றத்தில் புதிய வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வருகிறது.

ரூ.100 கோடி நிலமோசடி

திண்டுக்கல் மாவட்டம் பழநி பகுதியைச் சேர்ந்த அ.தி.மு.க. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வேணுகோபால் சேனாதிபதி, மதுரை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அவசர மனுவில் கூறியிருந்ததாவது:-

2004ஆம் ஆண்டில் இருந்து 2006 வரையிலான காலக்கட்டத்தில் பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் அறங்காவலராக பொறுப்பு வகித்தேன். 2011ஆம் ஆண்டு முதல் 2016 வரை பழநி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றி உள்ளேன்.

பழநி மலை அடிவாரத்தில் உள்ள 1.40 ஏக்கர் நிலத்தை வெள்ளத்துரை, சேதுபதி ஆகியோர் மோசடியாக பத்திரப்பதிவு செய்து இருக்கின்றனர். பழனி முருகன் கோயில் கட்டுப்பாட்டில் உள்ள இந்த நிலத்தின் மதிப்பு ரூ.100 கோடி என கூறப்படுகிறது. அவ்வாறு இருக்கும்போது நிலத்தின் மதிப்பை பல மடங்கு குறைத்து காட்டி ரூ.2 கோடிக்கு கிரையம் செய்து மோசடி நடந்துள்ளது.

ஓய்வு பெற்ற நீதிபதி

அதேபோல பத்திரப்பதிவு செய்த நாளில் சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனை பொறுப்பு அதிகாரியாக நியமித்த மாவட்ட பதிவாளரை இந்த நிலமோசடி வழக்கில் இதுவரை சேர்க்கவில்லை.

இந்த விவகாரம் தொடர்பாக பழநி மலை அடிவாரம் காவல் துறையினர் பதிவு செய்த வழக்கும், சி.பி.சி.அய்.டி. காவல் துறையினர் பதிவு செய்த வழக்கையும் சி.பி.அய். விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும். அதுமல்லாமல் இந்த விசாரணையை கண்காணிக்க ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதியை நியமிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறி இருந்தார்.

விரைவில் விசாரணை

இந்த வழக்கை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க வேண்டும் என்று நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், சக்திவேல் ஆகியோர் முன்பு வக்கீல் மாரீஸ்குமார் 24.7.2026 அன்று முறையிட்டார்.

அதற்கு நீதிபதிகள், இந்த வழக்கை முறையாக தாக்கல் செய்யுங்கள். வழக்கமான விசாரணை பட்டியலில் வரும் போது விசாரிக்கப்படும் என அறிவுறுத்தினர். எனவே இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என தெரிகிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *