‘நீட்’ தேர்வை எதிர்த்து சென்னையில் போராட்டம் தீவிரம்! கல்லூரி மாணவர்கள் வகுப்புகள் புறக்கணிப்பு!

2 Min Read

சென்னை, ஜூலை 25- இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பாலன் இல்லத்தில் கடந்த 5 நாள்களாக மாணவர்கள் தொடர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் போராட்டத்திற்கும் மாணவர்களின் ஆதரவு அதிகரித்து வருகிறது.

டில்லி ஜந்தர் மந்தரில் நடந்து வரும் காக்ரோச் ஜனதா கட்சி தலைமையிலான மாணவர்கள் போரட்டம், தமிழ்நாட்டிலும் வேகமெடுக்கத் தொடங்கியிருக்கிறது. குறிப்பாக சென்னையில் கல்லூரி மாணவர்கள் வகுப்புகள் புறக்கணிப்பு, தொடர் காத்திருப்பு போராட்டங்கள் என களத்தில் இறங்கியிருக்கின்றனர்

விரைவு நீதிமன்றங்கள் மூலம் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் கடுமையான தண்டனை வழங்கப்படும் என பிரதமர் மோடி நேற்றிரவு காணொலி காட்சிப் பதிவு வெளியிட்டிருந்தார். ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் போராடும் கரப்பான் பூச்சி அமைப்பினர் (காக்ரோச்கள்), தொடர்ந்து ஜந்தர் மந்தரில் குழுமி வருகின்றனர்.

ஒன்றிய அரசுக்கு எதிரான கண்டன முழக்கங்களையும் எழுப்பி வருகின்றனர். இந்நிலையில், சென்னையிலும் கரப்பான் பூச்சி அமைப்பினரின் போராட்டத்துக்கு ஆதரவாக கல்லூரி மாணவர்கள் களத்துக்கு வர தொடங்கியிருக்கின்றனர். இன்று காலை லயோலா, மாநிலக் கல்லூரி, நந்தனம் அரசுக் கல்லூரி மாணவர்கள் தங்களின் வகுப்புகளை புறக்கணித்து நீட் தேர்வுக்கு எதிரான முழக்கத்தோடு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

எஸ்எஃப்அய் (SFI) மற்றும் டிஒய்எஃப்அய் (DYFI) மாணவ அமைப்புகள் சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் நேற்று காலை முதல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மாலை 5 மணி வரை மட்டுமே காவல்துறையினர் இந்தப் போராட்டத்துக்கு அனுமதி கொடுத்திருக்கின்றனர். ஆனால், மாணவ அமைப்பினர் இந்தப் போராட்டத்தை ‘சென்னை ஜந்தர் மந்தர்’ எனப் பெயரிட்டு தொடர்ந்து நடத்த திட்டமிட்டிருக்கின்றனர்.

மாணவர்களுக்கு ஆதரவாக ‘மே 17’ இயக்கத்தினர் சாஸ்திரி பவன் முற்றுகையில் ஈடுபட்டுருந்தனர். உழைப்போர் உரிமை இயக்கத்தினர் ரிசர்வ் வங்கியின் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

ஏற்கெனவே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பாலன் இல்லத்தில் கடந்த 5 நாள்களாக மாணவர்கள் தொடர் காத்திருப்பு போராட் டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் போராட்டத்திற்கும் மாணவர்களின் ஆதரவு அதிகரித்து வருகிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *