வந்தவாசி, ஜூலை 23 வந்தவாசி அருகே உள்ள பெருமாள் கோயில் ஒன்றில் 8 பவுன் தங்க நகையைத் திருடியதோடு, ஊதியத்தையும் பெற்றுக்கொண்டு விடுதியில் கும்மாள மிட்ட பார்ப்பன அர்ச்சகரைக் காவல் துறையினர் கைது செய்தனர்.
கோயில்களில் நகைத் திருட்டு என்பது அசல் நகையைத் தூக்கிவிட்டுப் போலியான நகையை மாட்டி வைப்பதுதான். இதைக் கண்டுபிடித்தது விஜயநகர பேரரசர் கிருஷ்ணதேவராயர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.
வந்தவாசியில் உள்ள பழைமையான பெருமாள் கோயிலில் அர்ச்சகர் பணி செய்யும் ரகுராமன் என்ற பார்ப்பன அர்ச்சகர், சிலையை அலங்காரம் செய்யும்போது 8 பவுன் தங்கத்தாலியை பஞ்ச கச்சத்தில் சுருட்டி வைத்து, மாத ஊதியத்தையும் வாங்கிக்கொண்டு ஓடிவிட்டார்.
மறுநாள் அவர் பணிக்குத் திரும்பாததால், மாற்று அர்ச்சகர் சென்று சிலையை அலங்காரம் செய்தபோது 8 பவுன் நகை காணாமல் போனது தெரியவந்தது.
இதனை அடுத்து கோயில் நிர்வாகம் காவல் துறையில் புகார் அளிக்க, அவரது கைப்பேசி எண், திருவண்ணாமலையில் உள்ள விடுதி ஒன்றைக் காட்டியது. அங்கு சென்ற காவல் துறையினர் அவரை ‘மடக்கி’க் கைது செய்துள்ளனர். அவரிடமிருந்து 8 பவுன் நகையையும் பறிமுதல் செய்தனர்.
