மாணவர்கள் போராட்டம் எதிரொலி: டில்லியில் 2 ஆவது நாளாக 16 மெட்ரோ நிலையங்கள் மூடல்

புதுடில்லி, ஜூலை 23 டில்லியில் வினாத்தாள் கசிவுக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில், தலைநகரில் 16 மெட்ரோ ரயில் நிலையங்கள் இன்று (23.7.2026) மூடப்பட்டுள்ளன.
நீட் வினாத்தாள் கசிவு விவகா ரத்திற்கு எதிராக டில்லி ஜந்தர் மந்தர் பகுதியில் சிஜேபி இயக்கத்தினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு நாளுக்கு நாள் ஆதரவு பெருகி வரும் நிலையில், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டம் தீவிர மடைந்துள்ளது.
தற்போது நாடாளுமன்றக் கூட்டத் தொடர் நடந்து வருவதால், அசம்பா விதங்களைத் தவிர்க்க டில்லியில் காவல்துறையினர் மற்றும் பாதுகாப்புப் படையினர் கூடுதலாக பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தடியடி, கண்ணீர் புகைக்குண்டு வீச்சு மற்றும் போராட்டக்காரர்களின் வன்முறை போன்ற நிகழ்வுகளால் டில்லி பதற்றம் நிறைந்த பகுதியாகக் காணப்படுகிறது.
இந்தப் போராட்டத்தை கலைப்ப தற்கும், கூட்டம் அதிகரிப்பதை தவிர்ப்பதற்கும் டில்லியில் உள்ள 16 மெட்ரோ ரயில் நிலையங்கள் 2 ஆவது நாளாக இன்றும் (23.7.2026) மூடப்படுவதாக மெட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *